மகள் ஷாலினியை விலை பேசிய தந்தை… பணத்தை தூக்கி எறிந்த அஜித்..! ஷாலினி விவகாரத்தில் என்ன நடந்தது.

0
Follow on Google News

நடிகை ஷாலினி 4 வயதில் குழந்தை நச்சத்திரமான மலையாள சினிமாவால் அறிமுகமாகி, சுமார் 50 படங்கள் மேல் மலையாளம், தமிழ் தெலுங்கு என குழந்தை நட்சத்திரமாக தனது 11 வயதுக்குள் நடித்தார். தனது நான்கு வயத்தில் இருந்து 11 வயது வரையும் பிஸியான குழந்தை நட்சத்திர நடிகையாக வலம் வந்தார் ஷாலினி, இவர் பெரும்பாலும் மலையாள படத்தில் அதிகம் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக பல வெற்றி படங்களை கொடுத்த ஷாலினியை செல்லமாக பேபி ஷாலினி என சினிமா உலகம் அழைத்து.

ஷாலினி தங்கை ஷாமிலியும் குழந்தை நட்சத்திரமாக தனது இரண்டு வயதில் அறிமுகமானவர், தனது 11 வயதுக்குள் சுமார் 45க்கு மேற்பட்ட படங்களின் குழந்தை நச்சத்திரமாக பல வெற்றி படங்களில் நடித்தார். குழந்தை நட்சத்திரமாக மிக உச்சத்தில் இருந்த ஷாலினி தங்கை ஷாமிலி என்பதால், சினிமாவில் மிக பெரிய வரவேற்பு கிடைத்தது ஷாமிலிக்கு, மேலும் ஷாலினி மற்றும் அவரது தங்கை இருவரும் ஒரே மாதிரியாக இருந்ததால் ஷாலினிக்கு கிடைத்த அதே வெற்றி ஷாமிலிக்கும் கிடைத்தது.

ஷாலினி மற்றும் ஷாமிலி இவருடைய கால்சீட், சம்பளம் என அனைத்தையும் கவனித்து வந்தவர் இவர்களுடைய தந்தை தான். முதலில் ஷாலினியை வைத்து குழந்தை நட்சத்திரமாக பணம் சம்பாரித்த அவருடைய தந்தை. பின் ஷாலினி பெரிய பெண் ஆனதும் இரண்டாவது மகள் ஷமிலியை வைத்து குழந்தை நட்சத்திரமாக பணம் சம்பாரித்தார். பின்பு 7 வருடஇடைவெளிக்கு பின்பு ஷாலினியை கதாநாயகியாக நடிக்க வைத்தார் ஷாலினி தந்தை.

குழந்தை நட்சத்திரமாக நடித்தபோது கிடைத்த அதே வரவேற்பு கதாநாயகியாக ஷாலினி கதாநாயகியாக நடித்த போதும் கிடைத்தது. மேலும் இரண்டாவது மகள் ஷாமிலி பெரிய பெண்ணாக வளர்ந்த பின்பு அவருக்கு சினிமாவில் ஓய்வு கொடுத்துவிட்டு மூத்த மகள் ஷாலினியை கதாநாயகியாக நடிக்க வைத்து அவருடைய சம்பளம் மற்றும் கால் சீட்களை கவனித்து வந்தார் ஷாலினி தந்தை. தமிழ், மலையாளம் சினிமாவில் கதாநாயகியாக உச்சத்தில் இருந்தார் ஷாலினி.

குழந்தை நட்சத்திரமாக இரண்டு மகள்களையும் நடிக்க வைத்து பணம் சமபரித்தது போன்று, நடிகை ஷாலினியை கதாநாயகியாக நடிக்க வைத்து ஒரு ரவுண்டு சம்பாரித்து விடலாம் என திட்டமிட்டிருந்தார் ஷாலினி தந்தை. ஆனால் அமர்க்களம் படத்தில் நடித்து கொண்டிருந்த போது நடிகர் அஜித்தை காதலிக்க தொடங்கினர் ஷாலினி, இருவரும் காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

ஆனால் ஷாலினி தந்தை இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. தற்பொழுது ஷாலினி சினிமாவில் உச்சத்தில் இருக்கிறார், இந்த நேரத்தில் திருமணம் செய்து கொள்ளவேண்டாம். இன்னும் 5 வருடம் கழித்து நன்கு சம்பாரித்த பின்பு திருமணம் செய்யலாம், என தெரிவித்துள்ளார், ஆனால் அஜித் மற்றும் ஷாலினி இருவரும் திருமணம் செய்வதில் உறுதியாக இருந்துள்ளனர். மேலும் ஷாலினி மற்றும் அஜித் இருவரும் தங்கள் காதலில் உறுதியாக இருந்தனர்.

தனது காதலி ஷாலினி சினிமாவில் வேறு ஒரு நடிகருடன் ஜோடியாக நடிப்பதை விரும்பவில்லை அஜித், இதனால் உடனே திருமணத்துக்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். ஆனால் ஷாலினி தந்தை தனது மகள் இன்னும் சில வருடம் சினிமாவில் நடித்தால் கூட பெரும் தொகையை சம்பாரித்து விடுவேன், அதனால் ஷாலினியை திருமணம் செய்யவேண்டும் என்றால் தனக்கு ஒரு தொகையை தரவேண்டும் என அஜித்திடம் கேட்டுள்ளார் ஷாலினி தந்தை.

இதன் பின்பு ஒரு குறிப்பிட்ட பணத்தை ஷாலினி தந்தையிடம் கொடுத்து தான் அஜித் தனது காதலி ஷாலினியை மனைவியாக்கி கொண்டார் என கூறப்படுகிறது. மேலும் ஷாலினி தந்தையின் இந்த செயல் அஜித் மற்றும் ஷாலினி இருவருக்கும் சுத்தமாக பிடிக்கவில்லை என்றும், இதனால் திருமணத்துக்கு பின்பு ஷாலினி தந்தையை அஜித் மற்றும் ஷாலினி இருவருமே பெரிதாக கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் திருமணத்துக்கு பின்பு மாமனார் உடன் அஜித் சரியாக பேசியது கூட கிடையாது என்றும், தன் மீது எந்த அளவுக்கு காதல் இருந்திருந்தால், தன்னுடைய தந்தையிடம் பெரிய தொகை பணம் கொடுத்து தன்னை திருமணம் செய்திருப்பார் அஜித் என்பதை உணர்ந்து, திருமணத்துக்கு பின்பு தனது சினிமா வாழ்க்கைக்கு முழுக்கு போட்டு விட்டு, அஜித் மட்டுமே தன்னுடைய உலகம் என அவருக்கவே வாழ்ந்து வருகிறார் ஷாலினி என்பது குறிப்பிட்டத்தக்கது.

விரட்டியடித்த அஜித்… விஜய் விட்டு கதவை தட்டிய வடிவேலு..! அஜித் கோபத்துக்கு என்ன காரணம் தெரியுமா.?