மீண்டும் சிறுத்தை சிவா உடன் இணையும் அஜித்… அப்ப மகிழ் திருமேனி படம் என்னாச்சு.?

0
Follow on Google News

நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூல் சாதனை படைத்த திரைப்படம் துணிவு. இந்த படத்தில் நடித்து கொண்டிருக்கும் பொழுதே தன்னுடைய அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டு, அந்தப் படத்தின் இயக்குனரையும் உறுதி செய்தார் நடிகர் அஜித் குமார். லைக்கா தயாரிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கும் புதிய படம் துணிவு படம் முடிந்த உடனே தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் படப்பிடிப்பு தொடங்குவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு இயக்குனர் விக்னேஷ் சிவனை நேரில் அழைத்து படத்தின் முழு கதை கேட்ட அஜித், கதையில் உடன்பாடு இல்லை, கதை பிடிக்கவில்லை என அஜித் நடிக்கும் படத்திலிருந்து விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட்டார். இதனை தொடர்ந்து அடுத்து அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பு இயக்குனர் மகில் திருமேனிக்கு கிடைத்தது.

ஒன் லைன் ஸ்டோரியை கேட்டு மகிழ் திருமேனியை தன்னுடைய படத்தில் கமிட் செய்த அஜித்குமார் படத்தின் முழு ஸ்கிரிப்ட் ஒவ்வொரு காட்சியையும் விரிவாக தயார் செய்து வந்த பின்பு தான் படப்பிடிப்பு தொடங்கும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இதற்கு காரணம் நடிகர் அஜித் இதற்கு முன்பு விக்னேஷ் சிவனிடம் ஒன் லைன் ஸ்டோரியை நம்பி படத்தில் கமிட் செய்த பின்பு பின்பு முழு கதையும் கேட்டபோது அஜித்துக்கு அது பிடிக்கவில்லை.

அந்த வகையில் மீண்டும் அதே தவறை செய்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறர் அஜித், அதே போன்று இதற்கு முன்பு அஜித் நடிக்கும் படங்களின் கதைகளில் பெரிதாக அவர் கவனம் செலுத்துவது கிடையாது, ஒன் லைன் ஸ்டோரியை கேட்டுவிட்டு படத்தில் படப்பிடிப்புக்கு சென்று விடுவார். ஆனால் வலிமை படம் தோல்விக்கு பின்பு தன்னை நம்பி இருக்கும் ரசிகர்களை இனியும் நான் ஏமாற்றக்கூடாது என்கிற முடிவுக்கு வந்தார் அஜித்.

அந்த வகையில் அஜித் நடிக்கும் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு படத்தின் முழு கதையையும் கேட்டு அதில் திருப்தியாக இருந்தால் மட்டுமே அந்த படத்தை ஸ்டார்ட் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் அஜித். இந்நிலையில் மகிழ் திருமேனி முழு கதையும் தயார் செய்வதற்கு மிக தாமதமாகி கொண்டிருப்பதால் படப்பிடிப்பு தொடங்குவதற்கு தாமதம் ஏற்படுகிறது.

இதனால் பரவாயில்லை படத்தை ஸ்டார்ட் பண்ணுவோம் .. போக போக டெவெலப் செய்து கொள்ளலால் என அஜித்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதற்கு பரவாயில்லை நான் காத்திருக்கிறேன் என்று அஜித் தெரிவித்துவிட்டார். இந்நிலையில் சமீபத்தில் நடிகர் அஜித் – சிறுத்தை சூர்யா இருவரின் சந்திப்பு நடந்துள்ளது. அப்போது சிறுத்தை சிவா அடுத்து அஜித் நடிக்கும் புதிய படத்திற்கான ஒரு கதையைத் தெரிவிக்க, அந்த கதையை ஓகே செய்துள்ளார் அஜித்.

அஜித் – சிறுத்தை சிவா படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்க இருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்பு சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்க இருக்கும் படம் தொடங்கும் என்றும், அதே போன்று தற்பொழுது நடிகர் சூர்யாவை வைத்து சிறுத்தை சிவா இயக்கும் படத்தை முடித்துவிட்டு நடிகர் அஜித் நடிக்கும் புதிய படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணியை சிறுத்தை சிவா தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அஜித் தற்பொழுது மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்க இருக்கும் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு வருவதர்க்குள் புதிய படத்திற்கான முழு ஸ்கிரிப்ட் தயார் செய்து வைக்கும் படி சிறுத்தை சிவாவிடம் அஜித் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

கமல், சூர்யாவால் சிறைக்கு சொல்கிறாரா லிங்குசாமி.? சூர்யா, கமல் இருவரும் கருணை காட்ட கூடாதா.