தனி அறையில் மிரட்ட பட்ட அஜித்… விடாமுயற்சி படத்தை அஜித் கைவிட வாய்ப்பே இல்லை…

0
Follow on Google News

தமிழ் சினிமாவை வாழவைக்கும் தெய்வம் லைக்கா நிறுவனம் என்று சினிமா துறையினரால் கொண்டாடப்படும் வகையில் தொடர்ந்து பல படங்களை தயாரித்து வந்தது லைக்கா நிறுவனம். இந்த நிலையில் சமீபத்தில் லைக்கா நிறுவனத்தின் மீது நடந்த அமலாக்கத்துறை சோதனைக்குப் பின்பு, அவர்களின் வாங்கி கணக்குகள் முடக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து லைக்கா நிறுவனத்தினால் அடுத்தடுத்து படம் தயாரிக்க முடியாமல், அவர்களை தயாரிப்பில் எடுக்கப்பட வேண்டிய படங்கள் அடுத்தகட்டத்திற்கு நகர்த்த முடியாமல் திணறி வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் அஜித் நடிப்பில் லைக்கா தயாரிக்க இருக்கும் விடாமுயற்சி படத்தை, அமலாக்க துறை சோதனைக்கு பின்பு லைக்கா நிறுவனத்தினால் அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியமால் திணறி வருகிறார்கள்.

இதனால் விடாமுயற்சி படம் கைவிடப்படுகிறதா.? அல்லது வேறு ஒரு தயாரிப்பாளரின் கைக்கு மாறுகிறதா என்கிற மிக பெரிய குழப்பம் நீடித்து வந்தது. ஆனால் லைக்கா தரப்பில் எந்த ஒரு காரணத்திற்காகவும் விடா முயற்சி படத்தை கை விட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாகவும், மேலும் விரைவில் விடாமுயற்சி படத்தை தொடங்குவதற்கான வேலைகளில் தீவிரமாகவும் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது லைக்கா தரப்பிலிருந்து பிரபல சினிமா பைனான்சியர் அன்புச் செழியன் உதவியை நாடி உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அன்புச்செழியனுக்கும் லைக்கா தரப்புக்கும் தொழில் ரீதியாக ஒரு நல்ல ஒரு உறவு இருந்து வரும் நிலையில், லைகாவுக்கு தற்பொழுது ஏற்பட்டுள்ள இக்கட்டான ஒரு சூழலில் நிச்சயம் அன்பு செழியன் உதவி செய்வார் என கூறப்படுகிறது.

அதே நேரத்தில் லைக்கா தயாரிக்க இருக்கும் விடாம முயற்சி படத்தில் நடிகர் அஜித்துக்கு சுமார் 80 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்ட நிலையில், முதலில் கமிட்டான போது 20 கோடி ரூபாயும் அதன் பின்பு சமீபத்தில் 20 கோடி ரூபாய் ஆக மொத்தம் சுமார் 40 கோடி ரூபாய் அஜித்துக்காக இந்த படத்தில் சம்பளம் கொடுக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது .

அந்த வகையில் பாதி சம்பளத்தை வாங்கியுள்ள அஜித் இந்த படத்தில் இருந்து வெளியேற மாட்டார் மேலும் நடிகர் அஜித் மற்றும் இயக்குனர் மகில் திருமேனி இருவரும் இணைந்து விடா முயற்சி படத்திற்கான லொகேஷன் பார்க்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் மதுரை அன்பு செழியனுக்கும் நடிகர் அஜித்துக்கும் ஏற்கனவே பெரும் பிரச்சனை நடந்துள்ளது.

பாலா இயக்கத்தில் நான் கடவுள் படத்தில் அஜித் நடிப்பதாக உறுதி செய்யப்பட்ட பின்பு அந்த படத்திற்கு பைனான்ஸ் செய்துள்ளார் அன்பு செழியன், இதனை தொடர்ந்து பாலா மீது ஏற்பட்ட மோதல் காரணமாக நான் கடவுள் படத்தில் இருந்து விலகினார் அஜித்குமார்.இந்த பஞ்சாயத்தில் பைனான்சியர் அன்புசெழியன் டீல் செய்ய தொடங்கினர், எவ்வளவோ பேசியும் அஜித் மீண்டும் பாலா படத்தில் நடிக்க ஒப்பு கொள்ள வில்லை.

இதனை தொடர்ந்து அஜித்தை தனி அறையில் வைத்து அன்புச்செழியன் மிரட்டியும் அஜித்குமார் சம்மந்தம் தெரிவிக்கவில்லை, மேலும் அந்த தனி அறையில் அஜித்தை அவமானம் செய்யும் வகையில் அன்புசெழியன் மற்றும் இயக்குனர் பாலா நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. அந்த வகையில், தற்பொழுது விடாமுயற்சி படத்திற்கு மதுரை அன்பு தான் உதவி செய்ய முன் வந்துள்ளார் தகவல் நடிகர் அஜித்துக்கு தெரிந்தால் இந்த படம் அதற்கு அஜித் ஒப்புக்கொள்ள மாட்டார் என்கின்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் அதற்கான வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது. காரணம் இதற்கு முன்பு அஜித் நடிப்பில் வெளியான வலிமை மற்றும் துணிவு படத்தின் போது, அந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் மதுரை அன்புச் செழியனிடம் பைனான்ஸ் பெற்று தான் அந்த படத்தை எடுத்துள்ளார். அப்போது நடிகர் அஜித் இது குறித்து பெரிதாக கண்டு கொள்ளவில்லை. அதனால் நமக்கு சம்பளம் கிடைத்தால் போது என அன்பு செழியன் விவகாரத்தில் அஜித் கண்டு கொள்ள மாட்டார் என்றே கூறப்படுகிறது.

இந்நிலையில் அஜித் நடிக்க இருக்கும் விடாமுயற்சி திரைப்படம் தத்தளித்து கொண்டிருக்கையில், பழைய பகையை மனதில் வைத்து இது அஜித் படம் என்பதால் அன்பு செழியன் உதவி செய்யாமல் இருந்திருக்கலாம், ஆனால் அதையெல்லாம் மனதில் வைத்து கொள்ளாமல், தத்தளிக்கும் விடா முயற்சி படத்திற்கு உயிர் கொடுத்துள்ளார் அன்பு செழியன் என கூறப்படுகிறது.