அஜித் சொன்னத அவர் முதலில் சொன்னாரா.? அன்று பெரிய இது மாதிரி பேசிட்டு இப்ப சத்தமே இல்லாமல் இருந்த என்ன அர்த்தம் அஜித்…

0
Follow on Google News

நடிகர் சங்கம் கட்டடம் கட்டுவதற்காக இதற்க்கு முன்பு கலை நிகழ்ச்சி, கிரிக்கெட் போட்டிகளை நடத்தி வந்த பணத்தில் ஓரளவு மட்டுமே கட்டிடம் கட்ட பட்டது, அந்த வகையில் கலை நிகழ்ச்சி நடந்தி மக்களிடம் வசூலித்து நடிகர் சங்கம் கட்டிடத்தை கட்ட முடியாது என்பதை உணர்ந்துள்ளது நடிகர் சங்கம், மேலும் பாதி கட்டிடத்துடன் நிற்கும் நடிகர் சங்கம் கட்டிடத்தை முழுமையாக கட்டி முடிக்க நடிகர்களிடம் பணம் வசூல் செய்யும் வேலையை இறங்கியுள்ளது நடிகர் சங்கம்.

அந்த வகையில் விஜய், கமல் போன்ற நடிகரிடம் நிதி உதவி பெற்றுள்ளது நடிகர் சங்கம், இந்நிலையில் விஜய் ஒரு கோடி நடிகர் சங்கம் கட்டிடம் கட்ட கொடுத்துள்ள நிலையில் அஜித் கொடுப்பாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. நியாயமா நடிகர் அஜித் தான் முதலில் நடிகர் சங்கத்துக்கு முன் வந்து பணத்தை கொடுத்து இருக்க வேண்டும். காரணம் பல வருடங்களுக்கு முன்பு நடிகர் விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்த போது,

நடிகர் சங்க கடனை அடைப்பதற்கு வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சி நடத்த வேண்டும் என அஜித்தை விஜயகாந்த் அணுகிய போது வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்கள் எல்லாம் மிகக் குறைந்த சம்பளம் வாங்கி அங்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் அப்படி இருக்கையில் அவர்களிடம் சுரண்டி தான் நடிகர் சங்கத்தை மீட்க வேண்டுமா என விஜயகாந்திடம் நேரடியாக கேள்வி எழுப்பிய அஜித்.

சினிமா துறையில் உள்ள நடிகர்கள் நஅனைவரும் தங்களால் முடிந்த பணத்தை நிதி உதவி செய்து, அந்த பணத்தில் நடிகர் சங்கம் கடனை அடைக்கலாம் என தெரிவித்த அஜித், அதற்காக நான் பத்து லட்ச ரூபாய் தருகிறேன் என நடிகர் சங்கத்தை மீட்க பணம் கொடுக்க அஜித் முன்வந்த போது அதை வேண்டாம் என்று மறுத்துவிட்டார் விஜயகாந்த்.

இதனை தொடர்ந்து வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் கிடைத்த பணத்தை வைத்து நடிகர் சங்கத்தை கடனில் இருந்து மீட்டு எடுத்த விஜயகாந்த், மேலும் நடிகர் சங்கம் பெயரில் வங்கியில் வைப்பு நிதியும் வைத்து சென்றது அனைவர்க்கும் தெரிந்த ஓன்று. இந்த நிலையில் அன்று விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்த போது நடிகர்கள் அனைவரிடம் பணம் வசூல் செய்து கடனை அடைக்கலாம் என அஜித் அப்போது கொடுத்த ஐடியாவை தான் தற்பொழுது நடிகர்களிடம் வசூல் செய்து நடிகர் சங்கம் கட்டிடம் கட்ட முன் வந்துள்ளது நடிகர் சங்கம்.

இதற்காக சங்கம் நடிகர் விஷால் தலைமையில் குழு ஒன்றை அமைத்து நடிகர்களை சந்தித்து நடிகர் சங்க கட்டடத்திற்காக பண வசூலை செய்து வருகிறார்கள். இந்நிலையில் அந்த குழு நடிகர் அஜித்தை முதலில் சந்திக்க முடியுமா என்கின்ற மிக ஒரு கேள்வி எழுந்துள்ளது.? மேலும் தற்பொழுது அஜித்துக்கு உடல்நிலை சரியில்லாத சூழலில் அஜித்தை அவர்களால் ரிச் செய்ய முடியுமா என்பது மிகப்பெரிய குழப்பம் நீடித்து வருகிறது.

மேலும் நடிகர் விஜயகாந்த் நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த அஜித் வேறு தற்பொழுது இருக்கும் அஜித் வேறு, அவர் சினிமாவில் நடிப்பதுடன் அவருடைய சினிமாத் தொழில் முடிந்துவிட்டது என்பது போன்று சினிமா சார்ந்த மற்ற எந்த விவகாரகளிலும் தலையிட மாட்டார், குறிப்பாக நடிகர் சங்கத்தில் நடந்த தேர்தலில் கூட வாக்களிக்க நடிகர் அஜித் வரவில்லை.

அந்த வகையில் நடிகர் சங்கத்திலிருந்து மிக தொலைவில் தள்ளியே இருக்கும் அஜித், அந்த கட்டடம் கட்டினால் எனக்கென்ன என்று தான் இருப்பார் என்கிற விமர்சனம் எழுந்துள்ள நிலையில், விஜயகாந்த் தலைவராக இருக்கையிலேயே அஜித் முன் வைத்ததைத்தான் தற்பொழுது நடிகர் சங்கம் செயல்பட்டு வருகிறது, அதனால் அஜித் முன்வந்து நடிகர் சங்கம் கட்டிடம் கட்ட பணம் கொடுப்பாரா.? என காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.