ஏழு வருடம் அஜித் தந்தை குடும்பத்தை விட்டு பிரிந்தது ஏன்.? முக்கிய பிரபலம் வெளியிட்ட தகவல்..

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித் தந்தை சுப்ரமணியன் வயது முதிர்வு மற்றும் உடல் நல குறைவு காரணமாக மரணம் அடைத்தார். இதுதொடர்பாக நடிகர் அஜித், அவரது சகோதரர்கள் அனுப் குமார், அனில் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் எங்கள் அப்பா பி.எஸ்.மணி (85) பல நாட்களாக உடல்நலமின்றி படுக்கையில் இருந்து வந்தார். நேற்று அதிகாலை தன்னுடைய தூக்கத்தில் உயிர் நீத்தார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த எங்கள் தந்தையை அன்போடும், அக்கறையோடும் கவனித்து வந்த, எங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவர்களுக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். எங்கள் தந்தையார் சுமார் அறுபது ஆண்டு காலமாக எங்கள் தாயின் அன்போடும், அர்ப்பணிப்போடும் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.

இந்த துயர நேரத்தில், பலர் எங்கள் தந்தையாரின் இறப்பு செய்தியை பற்றி விசாரிக்கவும், எங்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காகவும் எங்களை தொலைபேசியிலோ, கைபேசியிலோ அழைப்பு விடுத்தோ அல்லது குறுந்தகவல் அனுப்பியோ விசாரித்து வருகின்றனர். தற்போதுள்ள சூழலில் எங்களால் உங்கள் அழைப்பை மேற்கொள்வதற்கோ அல்லது பதில் தகவல் அனுப்ப இயலாமையை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறோம்.

எங்கள் தந்தையாரின் இறுதி சடங்குகள் ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம். எனவே இந்த இறப்பு தகவலை அறிந்த அனைவரும் எங்களுடைய துயரத்தையும், இழப்பையும் புரிந்துகொண்டு, குடும்பத்தினர் துக்கத்தை அனுசரிக்கவும், இறுதி சடங்குகளை தனிப்பட்ட முறையில் செய்யவும் ஒத்துழைக்கும்படி வேண்டிக்கொள்கிறோம் என தெரிவித்து இருந்தார்கள்,

இந்நிலையில் முக்கிய நபர்கள் மட்டும் பங்கேற்று அஜித் தந்தையின் இறுதிச் சடங்கு பெசன்ட் நகர் மின்மயானத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்நிலையில் அஜித் தந்தை குறித்து பல தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது, அந்த வகையில் பிரபல பத்திரியாகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறுகையில்,

குடும்பத்தில் ஏற்பட்ட சில பிரச்சனையால், அஜித் தந்தை குடும்பத்தை விட்டு சுமார் 7 வருடம் பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும், பின்பு குடும்பத்துடன் ஒன்றாக இணைந்த பின்பு, அஜித் அவருடைய தாய் மற்றும் தந்தை இருவரையும் நன்றாக பார்த்து கொண்டதாகவும், மேலும் தந்தை மரணம் அடைவதற்கு முன்பு ஒவ்வொரு நாளும் சென்று தந்தையை அஜித் நேரில் பார்த்து அவருக்கு தேவையானதை செய்து வந்ததாக பயில்வான் தெரிவித்துள்ளார்.