அடி மேல் அடி வாங்கும் அஜித்… நயன்தாரா பாவம் சும்மா விடுமா.?

0
Follow on Google News

சமீப காலமாகவே நடிகர் அஜித் மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது, நடிகர் அஜித் விளம்பரங்களை விரும்ப மாட்டார் என்று சொன்னாலும், ஆனால் அவருடைய புகைப்படங்கள் எப்படி வெளியாகிறது என்கிற விவாதமும் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் விளம்பரங்களை விரும்ப மாட்டார் என்று சொல்லிக்கொண்டு அஜித் புகைப்படங்களை அவருடைய பிஆர்ஓ மூலம் வெளியிட்டு விளம்பரம் தேடிக்கொள்கின்றவர்தான் நடிகர் அஜித் என்று ஒரு பக்கம் விமர்சனம் எழுந்துள்ளது.

மேலும் சமீபத்தில் நடிகர் விஜயகாந்த் இறப்பிற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தாத நடிகர் அஜித் மீது அவருடைய ரசிகர்கள் மத்தியிலே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பலரும் நான் அஜித் ரசிகராக இருப்பதற்கு வெட்க படுகிறேன், என அஜித்துக்கு எதிராக இனி அஜித் படங்களை திரையரங்குகளில் பார்க்க மாட்டோம் என அஜித் ரசிகர்கள் அஜித் மீது தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் மக்கள் மத்தியில் அஜித்தின் செல்வாக்கும் குறைந்து கொண்டே இருந்து வரும் நிலையில், அஜித்துக்கு மொதுமக்கள் மத்தியிலும், அவருடைய ரசிகர்கள் மத்தியிலும் ஏன் அவர் சார்ந்த சினிமா துறையிலும் என இப்படி சுற்றி சுற்றி அடிவாங்கிக் கொண்டிருக்கிறார். துணிவு என்கின்ற ஒரு மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்த அஜித், அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருந்த நிலையில், அந்த படப்பிடிப்பு தொடங்க இன்னும் சில தினங்களில் இருந்த நிலையில் திடீரென்று விக்னேஷ் சிவனை கழட்டிவிட்டார் அஜித்.

நயன்தாரா எவ்வளவோ பேசியும் விக்னேஷ் இவனுக்கு கொடுத்த வாய்ப்பை தட்டி பிடிங்கி விட்டார் நடிகர் அஜித். இதனால் விக்னேஷ் சிவன் சினிமா கேரியரே முடிவுக்கு வந்து விட்டது என்றே சொல்லும் அளவுக்கு விக்னேஷ் சிவன் மீண்டும் பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார். இந்த நிலையில் அடுத்து விடாமுயற்சி படத்தில் கமிட்டான நடிகர் அஜித், அந்த படம் தொடங்கியது முதலே பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.

பொதுவாகவே அரபு நாடுகளில் வெப்ப தாக்கம் அதிகமாக இருக்கும், அதிக காற்று வீசினால் அந்தப் பாலைவனத்தில் மணல் காற்று வீசப்படும், கடும் குளிர் காரணமாக பணி விழுவதெல்லாம் மிக மிகக் குறைவு. இந்நிலையில் விடாமுயற்சி படத்தை முதலில் சார்ஜாவில் எடுத்து முடித்துவிட்டு சில காட்சிகளை சென்னையில் எடுக்கலாம் என்றுதான் ஆரம்பத்தில் முடிவு செய்துள்ளார்கள். ஆனால் திடீரென அஜர் பைஜானில் படப்பிடிப்பு நடத்த தொடன்கினார்கள் பட குழு.

அஜித்தின் நேரமோ என்னமோ தெரியவில்லை விடாமுயற்ச்சி படம் தொடங்கியது முதலே இயற்கை அந்த பட குழுவிற்கு போதிய ஒத்துழைப்பு தரவில்லை. இதனால் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறார்கள், அவ்வப்போது மணல் காற்று வீசுவதால், புழுதி பறக்க படப்பிடிப்பு தடைபட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் அஜர்பைஜானில் பனி பெய்து வருவது தான் முற்றிலுமாக விடாமுயற்ச்சி படம் தடைபட்டு நின்று கொண்டிருக்கிறது.

இடைவெளி விட்டு இடைவேளை விட்டு படபிடிப்பை நடத்தி வருவதால், படத்தின் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அஜித்க்கு இருக்கும் வியாபாரத்தை தாண்டி சென்று விட்டதால் இனி இந்த படம் லாபத்தை பெற்று தருமா.? என்கின்ற ஒரு பயமும் தயாரிப்பாளர்கள் படத்தின் தயாரிப்பாளருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்கள் மத்தியிலும் செல்வாக்கை இழந்து வரும் அஜித், இயற்கை மாற்றத்தினால் மறுபக்கம் விடாமுயற்ச்சி படம் பாதியிலே நிற்கிறது, இப்படி அஜித் அடி மேல் அடி வாங்குவதற்கு காரணம், விக்னேஷ் சிவனுக்கு வாய்ப்பு பின் அவரை வெளியேற்றிவிட்டு விக்னேஷ் சிவன் சினிமா கேரியரை முடிவுக்கு கொண்டு வந்த அஜித் மீது இருந்து கோபத்தில் நயன்தாரா சாபம் தான் அஜித்தை தற்பொழுது அடி மேல் அடி வாங்க வைத்து கொண்டிருக்கிறது என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.