தமிழ்நாட்டுக்கு குட் பை … குடும்பத்துடன் இந்தியாவை விட்டு வெளியேறும் அஜித்.. எங்கே செல்கிறார் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் அஜித் குமார் ஆரம்ப கட்டத்தில் சினிமாவில் அறிமுகமானபோது அனைத்து சினிமா நிகழ்ச்சிகளிலும் தவறாமல் அவரை பார்க்க முடியும். அதேபோன்று தொடர்ந்து அஜித் குறித்த பேட்டிகள் அனைத்து சினிமா நாளிதழ்களில், சினிமா வார இதழ்களில் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்,அந்த அளவுக்கு ஆரம்ப கட்டத்தில் பத்திரிக்கையாளர்களுடன் மிக நெருக்கமாக இருந்து வந்துள்ளார் அஜித் குமார்.

அதே நேரத்தில், அவர் அளிக்கும் அனைத்து பத்திரிகை பேட்டிகளும், அவருடைய வீட்டிற்கு பத்திரிக்கையாளர்களை அழைத்து அளித்து வந்துள்ளார். பத்திரிகையாளர்களை நேரில் வீட்டிற்கு அழைத்து சிறிது நேரம் அவர்களிடம் பேசிவிட்டு, பின்பு அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பேட்டி கொடுத்து. மீண்டும் பேட்டி முடிந்த பின்பு, தன்னனுடைய நடிப்பு பற்றி மக்கள் கருத்து என்ன என்பது குறித்து பத்திரிகையாளர்களிடம் கேட்டு அறிந்து கொள்வார் அஜித்குமார்.

ஒரு கட்டத்தில் அஜித் ஒரு உயரத்துக்கு வந்த பின்பும் கூட, அவருடைய பேட்டிகள் வழக்கம்போல் அனைத்து செய்தி ஊடகங்களிலும் வந்து கொண்டிருந்தது. மேலும் ஆரம்ப கட்டத்தில் இருந்து அஜித் அணைத்து பத்திரிக்கையாளர்களிடம் மிக நெருக்கமாக பழகி வந்ததால், அஜித் ஒரு உயரத்துக்கு வந்த பின்பும் கூட தங்கள் நெருக்கத்தை பயன்படுத்தி தொடர்ந்து அஜித்தை சந்தித்து பேட்டி எடுத்து வெளியிட்டு வந்தனர் பத்திரிகையாளர்கள், அஜித்தும் தவிர்க்க முடியமால் பேட்டி கொடுத்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் அஜித் பேட்டிகள் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி, இவர் பேச்சு ஓவராக இருக்கிறது என்கிற ஒரு விமர்சனம் எழுந்துள்ளது. உடனே அஜித்தை நேரில் அழைத்த ரஜினிகாந்த், நம்ம ஒரு உயரத்துக்கு வந்த பின்பு, அடிக்கடி பத்திரிக்கை பேட்டி கொடுக்க கூடாது, அது நம்ம மீது உள்ள எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் குறைத்துவிடும், அதனால் பத்திரிக்கை பேட்டியை குறைத்து கொள்ளுங்கள் என ரஜினிகாந்த் அட்வைஸ் செய்துள்ளார்.

ரஜினிகாந்த் அட்வைஸை ஏற்றுக்கொண்டு அதன் பின்பு முற்றிலுமாக பேட்டி கொடுப்பதை நிறுத்திக் கொண்டார் அஜித்குமார். இருந்தும் ஆரம்ப கட்டத்தில் தன்னுடைய நட்பு வட்டத்தில் இருந்த பத்திரிகையாளர்களை அவ்வப்போது விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அஜித்குமார் தன்னுடைய வாழ்க்கையை தற்பொழுது அணு அணுவாக ரசித்து வாழ்ந்து கொண்டு வருகிறார்.

அவர் பணத்திற்கு முக்கியத்துவம் குடுத்து இருந்தால் வருடத்திற்கு மூன்று பட கூட நடிக்கலாம், ஆனால் பைக்கில் வெளிநாடு சுற்றுப்பயணம், இந்தியாவில் உள்ள பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் என அவர் ஒரு வருடத்தில் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் நேரங்களை விட, பைக்கில் பயணம் செய்யும் நாட்கள் தான் அதிகமாக இருக்கிறது, அந்த அளவுக்கு பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் வாழ்க்கையை ரசித்து வருகிறார் அஜித்.

இந்நிலையில் அஜித்தின் நீண்ட நாள் ஆசையான லண்டனில் குடும்பத்துடன் செட்டிலாக வேண்டும் என்கிற விருப்பத்திற்க்கு ஏற்ப, பல கோடி செலவில் மிக பிரம்மாண்டமான வீடு ஒன்று லண்டனில் அஜித் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகிறது. விரைவில் குடும்பத்துடன் லண்டனில் செட்டிலாக இருக்கும் அஜித் குமார், படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக மட்டும் இந்தியா வந்து, ஒரு குறிப்பிட்ட காலம் மட்டும் இந்தியாவில் தங்கி படப்பிடிப்பு முடிந்ததும் மீண்டும் லண்டன் சென்றுவிடுவார் அஜித்.

இந்நிலையில் விரைவில் தமிழ்நாட்டுக்கு குட் பாய் சொல்லிவிட்டு, இந்தியாவை விட்டு வெளியேறி நிரந்தரமாக லண்டனில் குடும்பத்துடன் அஜித் செட்டிலாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடதக்கது. அதே நேரத்தில் அஜித் ஒரு வருட கால கெடு விதித்து, அந்த காலம் வரை மட்டுமே சினிமாவில் நடித்து விட்டு அதன் பின்பு சினிமாவுக்கு குட்பை சொல்லும் முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது.