ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஏ பி டிவில்லியர்ஸ்!

0
Follow on Google News

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மிஸ்டர் கிரிக்கெட் என்றும் 360 டிகிரி பிளேயர் என்றும் ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படுபவர் ஏ பி டிவில்லியர்ஸ். இவரின் வித்தியாசமான ஷாட்களால் தென் ஆப்பிரிக்கா மட்டும் இல்லாது உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றுள்ளார்.

இந்நிலையில் அவர் கடந்த 2018 ஆம் ஆண்டே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். அதன் பின்னர் ஐபிஎல் போன்ற டி 20 போட்டித் தொடர்களில் மட்டும் விளையாடி வந்தார். கடைசியாக ஐபிஎல் தொடருக்காக ஆர் சிபி அணிக்கு விளையாடினார். இந்த முறையாவது கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட ஆர் சி பி அணி வழக்கம் போல தோல்வியைக் கண்டது.

இந்நிலையில் இப்போது ஏ பி டிவில்லியர்ஸ் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். இது அவரின் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாகவும் அதிர்ச்சியாகவும் அமைந்துள்ளது.