மது போதையில் தனுஷ் ரகளை …உங்க அப்பா பெரிய யோக்கியமா .? தனுஷ்-ஐஸ்வர்யா உச்சக்கட்ட மோதலில் நடந்து என்ன.?

0
Follow on Google News

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா கல்லூரியில் படித்த போது வேறு ஒரு நடிகருடன் கிசு கிசுக்கப்பட்டு வந்த நிலையில், திடீரென யாரும் எதிர்பாராத விதமாக நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக பரபரப்பு அறிவிப்பு வெளியாகி அடுத்த சில தினங்களில் ரஜனிகாந்த் போயஸ் கார்டன் இல்லத்தில் இவர்கள் திருமணம் மிக எளிதாக நடைபெற்றது.

இந்நிலையில் இப்படி யாரும் எதிர்பாராத விதமாக இவர்கள் திருமணம் நடைபெற்றதோ. அதே போன்று இவர்களின் பிரிவும் யாரும் எதிர்ப்பாராத விதமாக நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தாங்கள் பிரிவதாக அறிவித்துள்ளது பலருக்கு அதிர்த்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தன்னுடன் நடிக்கும் சக நடிகைகளுடன் தொடர்ந்து கிசு கிசுவில் சிக்கி வந்தவர் நடிகர் தனுஷ், இதனால் இவர் மனைவிக்கு இவருக்கும் தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் தொடர்ந்து இரவு பார்ட்டிகளில் மது விருந்தில் சக நடிகைகளுடன் கலந்து கொண்டு போதையில் ஆட்டம் போடுவது பின் அந்த நடிகையுடன் இரவு முழுவதும் தங்குவது என தனுஷ் நடவடிக்கைள் நாளுக்கு நாள் அத்து மீறி சென்றுள்ளது. இதனை தொடர்ந்து இது தொடர்ந்தால் உன்னை விவாகரத்து செய்து விடுவேன் என ஐஸ்வர்யா மிரட்ட. இனிமேல் இது போன்ற தவறு நடக்காது என சமரசம் செய்து சில நாட்கள் மனைவி சொல்லே மந்திரம் என இருந்தார் தனுஷ்.

ஆனால் அது சில மாதங்கள் கூட தொடரவில்லை, மீண்டும் தனக்கு நெருக்கமான நடிகைகளை இரவு பார்ட்டிகளுக்கு அழைத்து சென்று மது விருந்தில் கலந்து கொண்டு ஆட்டம் போடுவது, அந்த நடிகையுடன் நாட்களை செலவு செய்வது என ஆரம்பித்தார் தனுஷ். இது மீண்டும் தனுஷ் – ஐஸ்வர்யா இடையே பிரச்சனையாக உருவெடுத்தது. ஆனால் இம்முறை தனுஷ் மனைவிக்கு கட்டுப்படுவதாக இல்லை. இந்நிலையில் தனுஷின் இந்த நடவடிக்கை தொடர்ந்து கொண்டே இருந்தது.

ஒரு கட்டத்தில் சினிமாவில் இதெல்லாம் சாதாரணம், நீ தான் என்னுடைய சுதந்திரத்தில் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும் என தனுஷ் தெரிவித்துள்ளார். இப்படி தொடர்ந்து கருத்து வேறுபாடுகளுடன் சென்ற இவர்களின் இல்லற வாழ்க்கையில், தனுஷ் இரவு பார்ட்டியில் கலந்து கொண்டு அன்று இரவு மது போதையில் வீட்டிற்கு வந்ததாக கூறபடுகிறது. அப்போது வீட்டில் ஐஸ்வர்யா – தனுஷ் தம்பதியர் இடையே வழக்கம் போல் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நீ இந்த நிலைமைக்கு இருக்க காரணம் எங்க அப்பா தான். அவர் பொண்ணுக்கு துரோகம் செய்ய உனக்கு மனசாட்சி உறுத்தவில்லையா என ஐஸ்வர்யா கேட்க, அதற்கு மது போதையில் இருந்த தனுஷ் உங்க அப்பா பெரிய யோக்கியமா.? அவர் செய்யாத சேட்டையா.. சினிமா இண்டஸ்ட்ரியில கேட்ட தெரியும், உங்க அப்பா கதையை தோண்டுனா நாறிடும் என தனுஷ் எல்லை மீறி போதையில் ரகளையில் ஈடுபட்டுள்ளார்,

இதன் பின்பு எங்க அப்பாவை நீ பேசிய பிறகு இனிமேல் எனக்கு நீ தேவையில்லை என ஐஸ்வர்யா கூற, அதற்கு நீ என்ன என்னை தேவையில்லை என சொல்வதற்கு, எனக்கு நீ தேவையில்லை என தனுஷ் தெரிவிக்க இவர்களின் மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இதன் பின்பு அடுத்த சில நாட்களிலே இவர்கள் இருவரும் நடந்ததை இரு வீட்டாரிடம் தெரிவித்து. பின் தாங்கள் பிரிவதாக இருவரும் அறிவித்துள்ளதாக கூறப்படுவது குறிப்பிடதக்கது.