காதல் திருமணம் செய்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட இளைஞருக்கு கத்தி குத்து.! குத்தியது யார் தெரியுமா?

0
Follow on Google News

தேனி மாவட்டம் நாச்சியார் புரத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் தேனியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். கல்லூரி படிப்பை முடித்த வேல் முருகன் திருப்பூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். வேல் முருகன் சொந்த ஊரான நாச்சியார் புறத்தில் வீட்டின் அருகில் வசித்து வந்த ரஞ்சினி என்ற இளம்பெண்ணை காதலித்து வந்தார்.

கடந்த மாதம் மார்ச் 22தேதி வீட்டை விட்டு வெளியேறிய பெண் தனது காதலனை திருமணம் செய்து கொண்டார். காதல் திருமணம் செய்து கொண்டு கரூரில் தஞ்சம் அடைந்து குடும்பம் நடத்தி வந்தனர். ரஞ்சினியின் பெற்றோர் மகளை காணாததால் காவல் நிலையத்தில் மகளை கடத்தி விட்டதாக புகார் அளித்தார்.

காவல் துறையினரின் திவீர தேடுதலில் காதல் ஜோடியை காண்டு பிடித்து தேனி காவல் நிலையத்தில் வைத்து இரு தரப்பினருக்கும் சமரச முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் நடந்ததோ வேறு ரஞ்சினியும் வேல்முருகனும் அவரவர் பெற்றோர்கள் உடன் சென்றனர். மனமுடைந்த வேல் முருகன் விஷயம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவரை மீட்டு விரைவாக தேனி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்தார்.

வேல் முருகனை பார்க்க வருவதுபோல் வந்த ரஞ்சினியின் தம்பி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வேல் முருகனை தாக்கினார். இதில் வேல் முருகன் பலத்த தாக்குதலுக்கு உள்ளனர். தற்போது திவீர சிகிச்சையில் உள்ளார் வேல் முருகன். சினிமா‌ பட பணியை போல் நடந்த இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் உள்ளாக்கியது.