கும்பலாக பெண்ணை கேலி கிண்டல் செத்த வாலிபர்…. ஓட ஓட வெட்டி சாய்த்த பெண்ணின் மச்சான்..!

0
Follow on Google News

முக்கூடல் : தம்பி மனைவியை கேலிசெய்ததால் ஆத்திரமடைந்த அண்ணன் தொடர்புடைய வாலிபரை சராமரியாக வெட்டிய சம்பவம் முக்கூடல் பகுதியில் பரபரப்பை கிளப்பியுள்ளது. மேலும் வகுப்புவாத மோதல் ஏற்படாமல் இருக்க போலீசார் கடும்கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலை ஒட்டி அமைந்துள்ள கிராமம் ஓ.துலுக்கப்பட்டி. இந்த பகுதியை சேர்ந்தவர் 23 வயதான எடிசன். இவர் மும்பையில் பணிபுரிந்து வருகிறார். லீவுக்கு சொந்த ஊருக்கு திரும்பிய அவர் வாழ்வில் விதி விளையாடியது. தனது கூட்டாளிகளை நீண்டநாள் கழித்து சந்தித்த எடிசன் அவர்களுடன் சேர்ந்து முக்கூடலில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலுக்கு உணவருந்த சென்றார்.

அந்த ஹோட்டலில் எடிசன் மற்றும் அவரது நண்பர்கள் அமர்ந்திருந்த டேபிளுக்கு எதிரே செண்பகம் என்பவர் தனது மனைவி மற்றும் குடும்பத்தாருடன் உட்கார்ந்திருந்தார். இதனிடையே சனிபகவான் எடிசன் மீது உட்கார தனது நண்பர்களுடன் சேர்ந்து செண்பகத்தின் மனைவியை கிண்டலடிக்க ஆரம்பித்தனர். ஒருகட்டத்தில் கொதித்துப்போன செண்பகம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

எடிசன் மற்றும் அவரது நண்பர்களுடன் நடந்த வாக்குவாதம் ஒருகட்டத்தில் கைகலப்பாக மாறியது. ஒருவரையொருவர் பலமாக தாக்கிக்கொண்டனர். இந்த சம்பவம் ஹோட்டலில் இருந்த சிசிடிவியில் பதிவானது. விரைந்து வந்த ஹோட்டல் ஊழியர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர். பின்னர் இருவரையும் ஹோட்டலில் இருந்து அனுப்பிவைத்தனர்.

இந்த தகவல் செண்பகத்தின் சகோதரர் கணேசன், எடிசன் தனது ஊருக்கு சென்றபோது இருசக்கரவாகனத்தில் விரட்டிச்சென்று அரிவாளால் சராமாரியாக வெட்டினார். இதில் நிலைகுலைந்த எடிசன் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் சரிந்தார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் எடிசனை மீட்டு முக்கூடல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு முதலுதவி செய்யப்பட எடிசன் மேல்சிகிச்சைக்காக பாளையம்கோட்டை அரசுமருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பாப்பாக்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உணவகத்தில் நடந்த கைகலப்பு தொடர்பான சிசிடிவி வீடியோக்களை போலீசார் ஆய்வுசெய்து வருகின்றனர்.