அந்த மனசு தான் சார் கடவுள்.! கோவையில் நடந்த மனிதநேயமிக்க சம்பவம்.!

0
Follow on Google News

கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முழுக்க குளிரூட்டப்பட்ட மருத்துவமனை என்பதால் எங்கள் மருத்துவமனைக்கு மின்விசிறி வசதி இல்லை கொரோனா காலத்தில் குளிர்சாதன வசதியை பயன்படுத்தக்கூடாது என்பதால் நோயாளிகள் காற்று இல்லாமல் சிரமப்படுவதால் அரசு சார்பில் 300 மின்விசிறிகள் தரப்பட்டதாக கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் தெரிவித்திருந்தார்,

ஆனால் மருத்துவமனைக்கு மேலும் மின்விசிறிகள் தேவைப்படுவதால் உதவ முன்வருபபவர்கள் மருத்துவமனைக்கு மின்விசிறிகளை வழங்கலாம் என்றும் கொரோனா காலம் முடித்தவுடன் அவர்கள் விரும்பினால் மின்விசிறிகள் திரும்ப பெற்று செல்லலாம் என கூறி இருந்தார். இந்த தகவல் அறிந்த கோவையை சேர்ந்த ஒரு தம்பதியினர் மருத்துவமனைக்கு வந்து தாங்கள் மின்விசிறி வழங்க முன் வருவதாக தெரிவித்துள்ளனர்.

இதனையெடுத்து அந்த தம்பதியினர் தங்கள் பெயர் (ம) முழு விவரங்களை வெளியிட வேண்டாம் என்று
கேட்டுக்கொண்டதற்கிணங்க 100 மின் விசிறிகளை ESI மருத்துவமனைக்கு வழங்க வந்து இருந்தார்கள் அவர்களை மருத்துவமனை ஊழியர்கள் விசாரித்தபோது காலையில் மருத்துவமனை முதல்வரின் அறிவிப்பை கேட்டவுடன் அவரும் அவர் மனைவியும் கையில் உடனடியாக பணம் இல்லாததால் தங்களுடைய தங்க நகையை அடகு வைத்து ரூ.2,20,000/- ரூபாய்க்கு அடகு வைத்து 100 மின்விசிறிகளை நோயாளிகளுக்கு வழங்க எடுத்து வந்ததாக கூறினர்.

தாங்கள் கஷ்டப்படும் நிலையில் உங்கள் சக்திக்கு தகுந்தார் போல நான்கோ ஐந்தோ மின்விசிறிகள் வாங்கி தருமாறு மருத்துவமனை முதல்வர் கூறியதற்கு அவர்கள் மறுத்து நாங்கள் கொடுத்து விட்டுதான் போவோம் என்று கூறினார்கள். முதல்வர் உடனடியாக மாவட்ட ஆட்சியருக்கு விவரம் தெரிவித்து மாவட்ட ஆட்சியரும் அவர்களுடன் பேசிய பிறகு அவரின் வேண்டுகோளுக்கு இணங்க அவர்களின் மனது வருத்தப்பட வேண்டாம் என அவற்றை பெற்றுக் கொண்டு தேவைப்படும் நோயாளிகளுக்கு உடனே வழங்க அறிவுறுத்தினார்கள்.