ரஜினியோடு திடீர் சந்திப்பு…. சசிகலா தரப்பு வெளியிட்ட அறிக்கை!

0
Follow on Google News

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சசிகலா அவரது இல்லம் தேடி சென்று சந்தித்துள்ளார். சிறைத் தண்டனை அனுபவித்து வெளியில் வந்துள்ள ஜெயலலிதாவின் உற்ற தோழியான சசிகலா இப்போது தனது அரசியல் காய்நகர்த்தல்களை செய்து வருகிறார். இதற்காக அவர் தொண்டர்களையும் அதிமுக கட்சி பிரமுகர்களையும் சந்தித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் நேற்று திடீரென நடிகர் ரஜினிகாந்தை சென்று சந்தித்துள்ளார். இது சம்மந்தமாக சசிகலா தரப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘ புரட்சித் தாய் சின்னம்மா அவர்கள் நேற்று மாலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இல்லத்திற்குச் சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது அவருடைய மனைவி திருமதி லதா ரஜினிகாந்த் அவர்களும் உடன் இருந்தார்கள்.

திரு ரஜினிகாந்த் அவர்கள் அண்மையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு தற்போது முற்றிலுமாக குணமடைந்து வந்துள்ளதை அறிந்த நேரில் சென்று சந்தித்து அவர்களுடைய உடல் நலனைப் பற்றியும் கேட்டறிந்தார். மேலும் திரு ரஜினிகாந்த் அவர்கள் கலை உலகின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கு தனது நெஞ்சம் இருந்த வாழ்த்துக்களையும் புரட்சித் தாய் சின்னம்மா அவர்கள் தெரிவித்தார்’ எனக் கூறப்பட்டுள்ளது.