மதுரையில் சினிமா பாணியில் பாஜக பிரமுகர் வீட்டில் கொள்ளை… 4 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு..

0
Follow on Google News

மதுரை பாஜக இளைஞரணி மாவட்ட செயலாளர் வீட்டில் திட்டமிட்டு வீடு புகுந்து கொள்ளை அடித்தாலும் 4 பேர் கொண்ட மர்ம கும்பல். போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். மதுரை திருமங்கலத்தில் நான்கு வழிச்சாலையில் உள்ள முத்தையா நகரில் வசித்து வருபவர் விஜயேந்திரன். இவர் மதுரை பாஜக மாவட்ட இளைஞரணி செயலாளராக உள்ளார்.

இவருக்கு செல்வி என்ற மனைவியும் மித்திரன் என்ற மகனும் ஹேசினா என்ற மகளும் இருக்கிறார்கள். இவர்கள் குடும்பத்துடன் அங்கு வசித்து வருகிறார்கள். இவர்களுடன் விஜயேந்திரனின் தாயாரும் வசித்து வருகிறார். புறநகர் பகுதி என்பதால் இவர்களது வீடு தனித்து இருக்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் வெளியே சென்றுள்ளார். வீட்டில் தாயார், மனைவி பிள்ளைகள் மட்டுமே இருந்துள்ளனர். இதனை நோட்டமிட்டு வீட்டிற்குள் புகுந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல்.

சினிமா பட பணியை போல் கத்திமுனையில் 35 பவுன் நகையையும் 1.5 லட்சம் பணத்தையும் கொள்ளை அடித்துவிட்டு தப்பிவிட்டனர். இதனையடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு கொள்ளையடித்த கும்பல் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் அந்த வீட்டில் உள்ள இருவருடைய செல்போனையும் வந்த கொள்ளையர்கள் எடுத்துச் சென்றதால் அந்த செல்போன் மூலம் டவர் மூலம் ஒரு பக்கம் தேடுகின்றனர். சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் சிக்கிய சில காட்சிகள் மூலம் கொள்ளையடித்த மர்ம கும்பலை போலீசார் தனிப்படை அமைத்து தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.