தமிழகத்தில் தொடர்ந்து அவமதிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வரும் பெரியார் சிலை.! சிசிடிவி காட்சி மூலம் போலீசார் தேடுதல் வேட்டை,!

0
Follow on Google News

தமிழகத்தில் சமீபகாலமாக தலைவர்களின் சிலைகள் அவமதிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கோவை மற்றும் திருச்சியில் பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசப்பட்டது. இதற்கு சில அரசியல் தலைவர்கள் எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.

போன வாரம் தஞ்சையில், ஒரத்த நாட்டில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகம் அருகில் உள்ள மூன்று சாலைகள் சந்திக்கும் இடத்தில் இருக்கும் பெரியார் சிலைக்கு தலையில் குல்லா வைத்து, காவி துண்டை போற்றினர். இதேபோன்ற சம்பவம் நேற்று மயிலாடுதுறை மாவட்டத்தில், சீர்காழி பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் சிலர் மாலை அணிவித்து, குங்குமம் வைத்துள்ளனர்.

இந்த செயலைக் கண்டு திராவிட கழகத்தினர் அதிர்ச்சியில், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.பெரியார் சிலையை சுற்றி இரும்பு கூண்டு அமைக்கப்பட்டிருந்தது. அதையும் மீறி இந்த அவமதிப்பு செயல் அரங்கேறியுள்ளது. உடனடியாக காவல்துறை பெரியார் சிலை சுற்றி அமைந்திருந்த இரும்பு கூண்டுக்கு பூட்டு போட்டு பாதுகாப்பு அளித்தனர். காவல் துறை பெரியார் சிலை அருகே உள்ள சிசிடிவி காட்சி மூலம் அந்த நபர் யார் என்று விசாரித்து வருகின்றனர்.