ஆடையை அவிழ்த்து கர்ப்பிணி மனைவிக்கு அந்த இடத்தில் சூடு வைத்த கணவன்… போலீஸ் வலைவீச்சு..

0
Follow on Google News

விருத்தாச்சலம் : தாலிகட்டிய கணவனே சைக்கோவாக மாறி கர்ப்பிணி மனைவியை விதம் விதமாக கொடுமைப்படுத்திய சம்பவம் விருத்தாசலம் பகுதியை அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது. உண்ண உணவு அருந்த நீர் என எதுவும் கொடுக்காமல் கைகால்களை கட்டிப்போட்டு மனைவியை கொடுமைப்படுத்திய கணவனை கண்டு தமிழகமே திகைத்துபோயுள்ளது.

விருத்தாச்சலம் மங்கலம்பேட்டை அருகே அமைந்துள்ளது பவழங்குடி எனும் கிராமம். இங்கு வசிப்பவர்கள் மணிராஜ் மற்றும் ஷர்மிளா தம்பதியினர். இவர்கள் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு இரு குழந்தைகளும் உள்ளனர். மேலும் தற்போது ஷர்மிளா பானு எட்டுமாத கர்ப்பிணியாக உள்ளார்.

இதனிடையே கல்யாணம் ஆன ஒரு வருடத்திலேயே ஷர்மிளா மீது மணிராஜ் சந்தேகம் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் மணிகண்டன் அடிக்கடி உடல்ரீதியாக ஷர்மிளாவை தாக்கி வந்துள்ளார். இதனால் அவர் அடிக்கடி கோபித்துக்கொண்டு தனது அம்மா வீட்டிற்கு செல்வது வழக்கம் என சொல்லப்படுகிறது.

மேலும் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் மணிராஜ் கடுமையாக ஷர்மிளாவை தாக்கியதாக சொல்லப்படுகிறது. அதனால் ஷர்மிளா கோபித்துக்கொண்டு தனது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார். ஒண்ணரை மாதகாலம் பொறுத்திருந்து மணிராஜ் மாமியார் வீட்டிற்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் சென்று ஷர்மிளாவை சமரசம் பேசி அழைத்துவந்துள்ளார்.

கணவனை நம்பி வந்த அந்த அபலைப்பெண்ணுக்கு காத்திருந்த விபரீதம் தெரியவில்லை. வீட்டிற்கு வந்ததும் தனது புத்தியை காட்டியுள்ளார் மணிராஜ். சாப்பிடும் கொடுக்காமல் தண்ணீரும் கொடுக்காமல் தொடர் கொடுமைகளை அரங்கேற்றியுள்ளார். மேலும் சிகரெட்டால் உடல்முழுக்க சூடுவைத்துள்ளார். மேலும் முழு சைக்கோவாக மாறியுள்ளார் மணிராஜ்.

நிறைமாத கர்ப்பிணி என்று கூட பாராமல் ஆடைகளை களைந்து நிர்வாணமாகியுள்ளார். பிறப்புறுப்பை கூட விடாமல் அங்கேயும் சூடு வைத்து மனித மிருகமாக மாறியுள்ளார் மணிராஜ். அதைத்தொடர்ந்து ஷர்மிளாவிற்கு அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. மிகவும் ஆபத்தான நிலையில் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விருத்தாச்சலம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்கு பதிந்து மணிராஜை தேடிவருகின்றனர். மணிராஜ் லாரி ஓட்டுநர் என்பதால் வெளிமாநிலங்களில் எங்கேயாவது பதுங்கியிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். தலைமறைவான மணிராஜை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.