கள்ள காதலனுடன் மற்றொரு கள்ள காதலனை துண்டு துண்டாக வெட்டிய கள்ள கள்ளக்காதலி..! எதற்கு தெரியுமா.?

0
Follow on Google News

சென்னை : திமுக பிரமுகர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. அதிலும் கொலை செய்ப்பட்டவரின் தலையை போலீசார் அடையார் ஆற்றில் இன்னும் தேடிவருவது பெரும் சலசலப்பை உண்டுபண்ணியுள்ளது. இதுதொடர்பாக பெண் உட்பட மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

சென்னை அருகே உள்ள மணலி செல்வவிநாயகர் கோவில் தெருவில் வசிக்கும் திருவெற்றியூர் 7ஆவது வார்டு பகுதி பிரதிநிதி சக்கரபாணி வயது 65. இவர் திமுக பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது முக்கிய தொழிலே கந்துவட்டிக்கு பணம் கொடுப்பது என சொல்லப்படுகிறது. இவர் கடந்த மே10 அன்று வீட்டை விட்டு தனது இருசக்கரவாகனத்தில் வெளியே சென்றவர் வெகுநேரமாகியும் வீடுதிரும்பவில்லை.

இதில் பதட்டமடைந்த சக்ரபாணியின் மகனான நாகேந்திரன் என்பவர் காவல்நிலையத்தில் புகார்மனு அளித்தார். நாகேந்திரன் புகாரின் அடிப்படையில் மணலி அசிஸ்டென்ட் கமிஷனர் தட்சிணாமூர்த்தி தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணையை தொடங்கினர். இதனிடையே சக்ரபாணியின் மொபைல்போனில் சிக்னலை வைத்து தேடிவந்தனர்.

களமிறங்கிய தனிப்படை போலீசார் ராயபுரம் கிரேஸ் கார்தான் மூணாவது தெருவில் வசிக்கும் தமீம் பானு (40) என்பவரின் வீட்டை சோதனையிட்டனர். அப்போது போலீசாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் குளியலறையை சோதனையிட்டபோது சக்ரபாணி துண்டுதுண்டாக வெட்டப்பட்டு சாக்குமூட்டையில் சடலமாக கிடந்தார்.

முதற்கட்ட விசாரணையில் தமீம்பானு மற்றும் அவரின் சகோதரரான வாசிம் பாஷாவும் சேர்ந்து சக்ரபாணியை துண்டுதுண்டாக வெட்டி சாக்குமூட்டையில் கட்டியது தெரியவந்தது. சடலத்தை மீட்ட போலீசார் வழக்கு பதிவுசெய்து இருவரையும் கைதுசெய்துள்ளனர். விசாரணையில் வட்டிக்கு பணமா கொடுக்கும்போது இருவருக்குள்ளும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உல்லாசமாக இருந்துள்ளனர். ஒருகட்டத்தில் போரடிக்கவே பானு விலக முயற்சித்துள்ளார். மேலும் பானுவின் கீழ் வீட்டிலுள்ள டெல்லி என்ற ஆட்டோக்காரருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த இரு ஜோடிகளும் கணவரும் சக்ரபாணியும் இல்லாத நேரத்தில் உல்லாசமாக இருந்துவந்துள்ளனர்.

இதனிடையே கடந்த 10 மே அன்று இரவு தமீன் பானு வீட்டிற்கு வந்த சக்கரபாணி உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். அந்நேரத்தில் தமீன் பானு கூச்சலிட அவரது தம்பி ஓடிவந்துள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து கத்தி மற்றும் அரிவாளால் வெட்டிக்கொன்றுள்ளனர். மேலும் தலையை வெட்டி குடலை உருவி தனித்தனி கவரில் போட்டிருக்கிறார்கள்.

மேலேயும் வெட்டிய தலையை வாசிம் பாஷா மற்றும் டெல்லிபாபு இருவரும் அடையாறு மலர் மருத்துவமனை அருகே ஆற்றில் கல்லை கட்டி தலையை போட்டுள்ளனர். குடலை காசிமேடு துறைமுகம் பகுதியில் படகுகள் நிற்கும் பகுதியில் போட்டுள்ளனர். இந்த தகவல்களை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் தலையை தேடும்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.