உடற்பயிற்சியால் களைத்துப்போய் ஜிம்மில் குளியல்… ரகசியமாக வீடியோ எடுத்த மர்ம நபர்… இளம் பெண் அதிர்ச்சி..

0
Follow on Google News

சென்னையில் ஜிம்மில் இளம் பெண் குளிக்கும் போது மறைந்திருந்து ரகசியமாக ஆபாசமாக வீடியோ எடுத்த மர்ம நபர் கைதானார் சென்னை அண்ணாநகரில் தனியார் ஜிம் ஒன்று இயங்கி வருகிறது. உடல் எடையை குறைக்கவும், உடல் அழகாகவும் கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள ஆண் பெண் இருவருமே ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை அண்ணாநகரில் உள்ள ஜிம் ஒன்றில் 28 வயதுடைய இளம் பெண் ஒரு உடல் பயிற்சி செய்து வந்தார். நேற்று மாலை எப்போதும்போல் பயிற்சியை முடித்த அந்த பெண் ஜிம்மில் உள்ள பாத்ரூமில் குளிக்கச் சென்றார். அந்தப் பெண் குளித்துக் கொண்டிருக்கும்போது ஜன்னல் வழியாக மர்ம நபர் ஒருவர் ஆபாசமாக படம் பிடித்து கொண்டு இருந்தார்.

இதை கவனித்த அந்த இளம் பெண் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். இதை சுதாரித்துக்கொண்டு அந்த மர்மநபர் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார். இந்த நிலையில் குளிக்கும் போது தன்னை ஆபாசமாக வீடியோ எடுத்த அந்த மர்ம நபர் மீது அந்த இளம் பெண் அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து ஜிம்மில் சிசிடிவிகள் இருந்ததால் அதன்மூலம் அந்த மர்ம நபர். மதுரவாயிலில் உள்ள தனியார் சட்டக் கல்லூரியில் படிக்கும் பரத் என்றும் அவர் வரும் பக்கத்தில் வசித்து வரும் அவரை வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். கைதான செய்யப்பட்ட பரத் ஜாமின் மூலம் வெளியே வந்துள்ளார்.