டுபாக்கூர் அகோரி கலையரசன்… எங்க வந்து என்ன பேச்சு பேசுற… செமத்தியா அடி வாங்க போற…

0
Follow on Google News

தன்னை அகோரி என்று கூறிக்கொண்டு சுற்றி வரும் 24 வயது அகோரி கலையரசன் தான் தற்பொழுது சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளார். தன்னை அகோரி என்று சொல்லிக்கொண்டு கலையரசன் கொடுக்கும் பில்டம் இவர் உண்மையான அகோரி தானா என்கிற சந்தேகம் பலருக்கு வந்துள்ளது.சில வருடங்களுக்கு முன்பு டிக் டொக் கில் பிரபலமாக இருந்த கலையரசன். அவர் மனைவியுடன் இணைந்து டிக் டாக் வீடியோ வெளியிட்டு மிக பிரபலமானார்.

சில காலம் காணாமல் இருந்த கலையரசன் தற்பொழுது தீடிரென தான் அகோரி என ஒவ்வொரு சேனலாக பேட்டி கொடுத்து வருகிறார். தனக்கு காளி தேவி காட்சி கொடுத்ததாகவும், சிவனோடும் தான் சகஜமாக அமர்ந்து உரையாடுவதாகவும் தெரிவித்து வரும் கலையரசன், தான் 40க்கு மேற்பட்ட டாக்டர் பட்டங்கள் பெற்றிருப்பதாகவும் ஆடம்பர கார்கள் பங்களாக்கள் என சுகபோகமாக வாழ்ந்த தான் எல்லாவற்றையும் விட்டு அகோரியானதாக தெரிவிக்கும் கலையரசன்.

தனக்கு சிங்கள மொழி நன்றாக தெரியும் என்றும் தான் இலங்கையில் அமைச்சராக பணியாற்றியதாக அவிழ்த்து விடும் கலையரசன், தான் அமைச்சராக இருக்கும் போது தினமும் பாடசாலை மற்றும் கல்லூரிகளுக்கு பிரதம அதிதியாக சென்றதாகவும் இலங்கையில் தான் பெரும் பிரபலமாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் தனக்கு மரணத்தை கணிக்கும் ஆற்றல் இருக்கு என இப்படி கலையரசன் அவிழ்த்துவிடும் நம்பமுடியாத தகவல்கள் கேலி கிண்டலுக்காகவே தற்பொழுது அவருடைய ஒவ்வொரு பேட்டியும் வைரலாகி வருகிறது, மேலும் இவர் உண்மையை சொன்னா என்ன.? பொய் சொன்னா என்ன.? நமக்கு வீவ்ஸ் வந்தால் போதும், என யூ ட்யூப் சேனல்கள் பேட்டி எடுத்து கலையரசனை ட்ரெண்ட் செய்து வருகிறது.

கடந்த சில வருடங்களுக்கு முன் சாதாரண கிராமத்தில் பிறந்து மிகவும் கஷ்டப்பட்டு டிஃடொக்கில் பிரபலமானதாக சொல்லிக் கொண்டிருந்த கலையரசன் இப்படியெல்லாம்நம்ப முடியாத பொய்களை அவிழ்து விட்டு கொண்டிருப்பது இவரை நல்ல மனநல மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் விஜயகாந்த் சமாதிக்கு சென்ற கலையரசன் , விஜயகாந்த் இறப்பது எனக்கு முன்பே தெரியும். அவர் இறந்த சமயத்தில் நான் காசியில் இருந்தேன். இதனால் அப்போது அவரை பார்க்க வரமுடியவில்லை. இது சமாதி இல்லை கோவில், இந்த கோவிலுக்கு வந்தால், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும் என தெரிவித்த நேரம் மட்டும் விஜயகாந்த் உயிரோடு இருந்திருந்தால் கண்டிப்பாக இவருக்கு சவுக்கடி நிச்சயமாக கிடைத்திருக்கும் என பலரும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

விஜயகாந்தின் இமேஜையே கெடுக்கும் வகையில் அங்கு வந்து இங்கே வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும், திருமண வரன் கிடைக்கும் என டுபாக்கூர் அகோரி கலையரசன் பேசியுள்ள வீடியோவை பார்த்தவர்கள் எங்க வந்து என்ன பேசுகிறார், வெட்டியா அடி வாங்க போகிற என பலரும் டுபாக்கூர் அகோரி கலையரசனை எச்சரித்து வருகிறார்கள்.

இந்நிலையில் தற்பொழுது அகோரி கலையரசன் போடிக்கு வந்திருப்பதை அறிந்ததும் தேனி மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் மக்கள் அவரை காணக் குவிந்தனர். அவர்களுக்கு அருளாசி வழங்குவதாக கூறி, கலையரசன் வாய்க்கு வந்ததை அவிழ்த்து விடுவதை அருள் வாக்கு என நம்பி செல்லும் மக்களை என்னெவன்று சொல்வது.? இப்படியே மக்கள் கூட்டம் அலைமோதினால், எதிர்காலத்தில் இந்த டுபாக்கூர் அகோரி கலையரசன், சினிமா பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் அப்பாயிண்ட் மென்ட் வாங்கி பாக்க கூடிய சாமியாராக உருவெடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.