28 வயது ராமசாமி கொடுத்த பாலியல் தொல்லையை தாங்கமுடியாமல் 13 வயது சிறுமி என்ன செய்தார் தெரியுமா.?

0
Follow on Google News

தமிழகத்தில் நாளுக்கு நாள் சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்து வருகிறது. இது போன்ற பாலியல் குற்றங்களை தடுக்க கடினமான சட்டங்களை கொண்டு வந்தாலும் குற்றங்கள் குறைந்தபாடு இல்லை. மதுரை மாவட்டத்தில் கள்ளிக்குடி பகுதியில் உள்ள கிராமம் தான் சுந்தரங்குண்டு. இந்த கிராமத்தை சேர்ந்த 28வயதுடைய ராமசாமி என்றவர் கூலி வேலை செய்து பார்த்து வந்துள்ளார்.

அதே பகுதியில் 13வயதுடைய சிறுமி ஒருவர் காரியாபட்டியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகளில் வகுப்புகள் நடைபெற வில்லை. இதனால் வீட்டில் இருந்த சிறுமி இந்த இடைவெளியில் தையல் பயிற்சி சென்று வந்தார். தினமும் தையல் பயிற்சிக்கு சிறுமி இடைவிடாமல் சென்று வந்துள்ளார்.

தையல் பயிற்சிக்கு சென்று வரும் 13வயதுடைய சிறுமிக்கு கூலி தொழிலாளி ராமசாமி தினமும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு உள்ளார். ராமசாமி கெடுக்கும் பாலியல் தொல்லை தாங்க முடியாமல் சிறுமி தனது தாயிடம் நடந்ததைக் கூற படபடத்து போய் விட்டார். உடனடியாக மகளிர் காவல் நிலையத்தில் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த ராமசாமி மீது புகார் கொடுத்தார். புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் ராமசாமியை விரைவாக கைது செய்தனர். மேலும் இது போன்ற பாலியல் குற்றங்களை தடுக்க தமிழக அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்