உறவுக்கு மறுத்த மனைவி… ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூர செயல் என்ன தெரியுமா.?

0
Follow on Google News

ராணிப்பேட்டை : கணவன் மனைவிக்குள் இருக்கும் தாம்பத்யம் புனிதமானது என தமிழ்கலாச்சாரம் எடுத்துரைக்கிறது. ஆனால் சிலரால் தமிழ்கலாச்சாரம் வேகமாக சீரழிந்துவருகிறது. அதற்க்கு உதாரணமாக பல சம்பவங்களை எடுத்துக்கூறலாம். அந்த வகையில் பெத்த தந்தையே பச்சிளங்குழந்தையை கொன்ற சம்பவம் ராணிப்பேட்டை மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியை ஒட்டியுள்ள தோள்ச கிராமத்தை சேர்ந்தவர் மனோகர் என்ற மனோ. இவர் திருநின்றவூர் பகுதியில் உள்ள ஒரு பூக்கடையில் தினக்கூலியாக பணிபுரிந்து வருகிறார். மனோவுக்கு கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர் நந்தினி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு கடந்த மாதம் தான் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில் நேற்று வழக்கம்போல வேலைக்காக மனோ திருநின்றவூர் சென்றுவிட்டு இரவு வீடுதிரும்பியுள்ளார். இரவில் வழக்கம்போல மனோவும் நந்தினியும் தூங்கிவிட்டனர். இந்நிலையில் திடீரென நள்ளிரவு 2 மணிக்கு குழந்தை காணாமல் போயுள்ளது. அதை உணர்ந்த நந்தினி அலறியடித்து தேடியுள்ளார். நந்தினியின் அழுகுரலை கேட்ட குடும்பத்தினர் என்னவோ ஏதோ என பதறியடித்து அவரிடம் என்ன என விசாரித்துள்ளனர்.

அதன்பிறகே குழந்தை காணாமல் போனது தெரியவந்துள்ளது. அதைத்தொடர்ந்து குடும்பத்தினர் வீடுமுழுக்க தேடுகையில் அவர்களுக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது. வீட்டில் உள்ள பாத்ரூமில் உள்ள ஒரு தண்ணீர் நிறைந்த வாளியில் குழந்தை தலைகீழாக கிடந்துள்ளது. இதைக்கண்ட நந்தினி மற்றும் குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறியழுதனர். பிறந்து சரியாக நாற்பதே நாள் ஆன குழந்தையின் மரணம் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது குடும்பத்தினருக்கு.

சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மனோவின் வீட்டிற்கு வந்த போலீசார் பச்சிளங்குழந்தையின் சடலத்தை மீட்டு போஸ்ட்மார்ட்டத்திற்கு அனுப்பினர். மேலும் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பல அதிர்ச்சியான விஷயங்கள் வெளிப்பட்டுள்ளது. சம்பவத்தன்று இரவு சரியான போதையில் வந்திருத்த மனோ நந்தினியிடம் உறவுக்கு அழைத்துள்ளார்.

மனோ குடித்திருந்ததால் நந்தினி மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனோ நந்தினி தூங்கியதும் குழந்தையை தூக்கிகொண்டுபோய் நீர் நிறைந்த வாளியில் அமுக்கி கொன்றுவிட்டு சாதாரணமாக படுத்துக்கொண்டார். இந்த தகவல்களை மனோவிடமிருந்தே வாங்கிய போலீசார் அவரை கைதுசெய்துள்ளனர். மனைவி உறவுக்கு மறுத்ததால் தந்தையே பெற்ற குழந்தையை கொன்ற சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.