சாலையில் நடந்து செல்லும் பெண்களிடம் சில்மிசத்தில் ஈடுபட்ட 21 வயது சில்வண்டு கைது…

0
Follow on Google News

சென்னை பகுதிகளில் இரவு நேரங்களில் ஆள் நடமாட்டமற்ற சாலையில் நடந்து செல்லும் இளம் பெண்களிடம் பைக்கில் வந்து சில்மிஷத்தில் செய்து வந்த இளைஞர். சென்னை சாஸ்திரி நகர் பகுதியில் வசித்து வந்த ஒரு பெண் வேலைக்கு சென்று வருவதை பைக்கில் சென்று நோட்டம் விட்டான். அந்த பெண் வேலைக்கு தனியாக தினமும் நடந்து சென்று வருவதை உறுதி செய்தான்.

ஒரு நாள் அந்த பெண் வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது, பைக்கில் பெண் அருகில் வந்து சில்மிஷத்தில் ஈடுபட்டுவிட்டான். அந்த பெண் கூச்சலிட மின்னல் வேகத்தில் தப்பித்த அந்த இளைஞன். இந்தப் பெண் துணிச்சலுடன் காவல் நிலையம் சென்று புகார் அளித்தார். இதுவரை யாரும் அந்த இளைஞன் மீது புகார் அளிக்கவில்லை. காவல் துறை தேடுதல் வேட்டையில் களமிறங்கியது. காவல் துறையின் முக்கிய நண்பனான சிசிடிவி தான் இவனை பிடிக்க பெருமளவில் உதவியது.

சிசிடிவி காட்சியில் இவன் பைக்கின் நம்பரை வைத்து வீட்டு முகவரியை கண்டுபிடித்த காவல்துறை. அவனை கைது செய்ய சென்னை பூந்தமல்லி அக்ரகாரம் தெருவில் உள்ள அவனது வீட்டுக்கு சென்ற காவல்துறை. “பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் அதுபோல்” பலநாள் இவன் செய்த அட்டூழியங்கள் இந்தப் பெண்ணின் மூலம் முடிவுக்கு வரப் போவது தெரியாமல் வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தவனை அலேக்காக தூக்கியது காவல்துறை காவல் நிலையம், சென்றது. காவல்துறையிடம் அவன் கொடுத்த வாக்குமூலம் தான் காவல் அதிகாரிகளை அதிர்ச்சியில் உறைய வைத்தது.

பெண்களிடமும் இவன் தினமும் சில்மிஷ வேலையில் பல வருடங்களுக்கு மேலாக ஈடுபட்டு வந்துள்ளதும், இவனது டார்கெட் அழகான பெண்கள் யாராக இருந்தாலும் விட்டு வைப்பதில்லை. இவனின் வயது 21, தனியார் நிறுவனத்தில் பணம் வசூல் செய்யும் வேலை செய்து வந்துள்ளான். பார்ட் டைமாக சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்த இந்த சில்வண்டு தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறது. தனக்கு ஏற்பட்டிருக்கும் துயரத்தை தைரியமாக வந்து காவல்நிலையத்தில் புகார் அளித்த அந்தப் பெண்ணுக்கு பாராட்டுக்கள்.