நியுசிலாந்து வீரர்களின் செயல் சாதாரணமானது இல்லை… டிராவிட் பாராட்டு!

0
Follow on Google News

நியுசிலாந்து அணி உலகக்கோப்பையை விளையாடி முடித்த அடுத்த 48 மணிநேரத்தில் இந்தியாவில் நடந்த தொடரில் கலந்துகொண்டது. இந்திய அணிக்கு உலகக்கோப்பை தொடர் எதிர்பார்த்த விதமாக அமையவில்லை. ஆனால் நியுசிலாந்து அணி இறுதிப் போட்டி வரை சென்று தோல்வியைத் தழுவியது. ஆனால் அடுத்த 48 மணி நேரத்துக்குள் இந்தியாவில் நடந்த தொடரில் கலந்துகொள்ள வேண்டி இந்தியா வந்தது.

இந்தியாவிலும் ஆறே நாட்களில் 3 நகரங்களுக்கு பயணம் செய்து போட்டிகளில் விளையாடியது.
எல்லா போட்டிகளிலும் தோல்வியைத் தழுவினாலும் நியுசிலாந்து அணியை பாராட்டியுள்ளார் இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் ராகுல் டிராவிட். இதுகுறித்து பேசியுள்ள அவர் ‘நாம் நம் வெற்றியை எதார்த்தத்துடன் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களின் செயல் அசாதாரணமானது’ எனப் பாராட்டியுள்ளார்.