சிக்ஸ் அடித்த கோபத்தில் பேட்ஸ்மேனைத் தாக்கிய ஷகீன் அப்ரிடி… அபராதம்!

0
Follow on Google News

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷகீன் ஷா அப்ரிடி வங்கதேச தொடரில் இப்போது விளையாடி வருகிறார்.
உலகக்கோப்பை தொடரில் கலக்கிய பாகிஸ்தான் அணி நூலிழையில் கோப்பை வாய்ப்பை இழந்தது. இதையடுத்து இப்போது வங்கதேசம் சென்று டி 20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் ஷா அப்ரிடி செய்த செயல் கண்டனங்களை பெற்றுள்ளது. நேற்று முன் தினம் நடந்த போட்டியில் அப்ரிடி வீசிய பந்தில் வங்கதேச வீரர் அபிப் ஹுசைன் சிக்ஸர் அடித்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்ரிடி அவரை நோக்கி வேண்டுமென்றே தாக்கும் விதமாக பந்துவீசினார். இது ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது. இந்நிலையில் அப்ரிடிக்கு 15 சதவீதம் போட்டி கட்டணத்தில் அபராதம் விதித்துள்ளனர் நடுவர்கள்.