அடுத்த ஆண்டு ஐபிஎல் சென்னையில் தொடங்குகிறது… 60 நாட்களுக்கு மேல் நடக்கும் என தகவல்!

0
Follow on Google News

ஐபிஎல் 2022 தொடர் அடுத்த ஆண்டு சென்னையில் தொடங்க உள்ளதாக தகவல்களை ஆங்கில ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. கொரோனாவுக்கு மத்தியில் இரண்டு கட்டங்களாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டுக்கான தொடர் இந்த ஆண்டு சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மைதானமான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இது சம்மந்தமாக அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், பிசிசிஐ தரப்பில் ஐபிஎல் அணிகளுக்கு தகவல் அனுப்பப் பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.அடுத்த ஆண்டு கூடுதலாக இரண்டு அணிகள் இணைவதால் போட்டிகளின் எண்ணிக்கை அதிகமாகி தொடர் 60 நாளுக்கு மேல் நடக்கும் என சொல்லப்படுகிறது. ஏப்ரல் 2 ஆம் தேதி தொடங்கும் தொடரின் இறுதிப் போட்டி ஜுன் மாதத்தில் நடக்கும் என சொல்லப்படுகிறது.