இந்து விரோத, இந்திய விரோத திமுக தன்னைதிருத்திக்கொண்டு இது போன்ற சக்திகளை ஒடுக்கி வைக்குமா.? பேராசிரியர் கேள்வி..

0
Follow on Google News

சமீபத்தில் மதபோதகர் ஜார்ஜ் பொன்னையா பேசிய பேச்சுக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, அதில். திமுக அமைச்சர் சேகர் பாபு. , அமைச்சர் மனோ தங்கராஜ் ஒன்று சொல்கிறேன் நீங்கள் எத்தனை கோவிலுக்கு குடமுழுக்கு கொடுத்தாலும், எத்தனை கோவிலுக்கு துணி உடுத்தாமல் சாமி நீங்கள் கும்பிட்டாலும், ஒருத்தன் கூட உங்களுக்கு ஓட்டு போட மாட்டான். மண்டைக்காடு பக்தனும் உங்களுக்கு போட போடுவது கிடையாது, இந்துக்களும் உங்களுக்கு ஒட்டு போட போடுவது கிடையாது

நீங்கள் வெற்றி பெற்றது கிறிஸ்துவ மக்களும், முஸ்லிம் மக்களும் உங்களுக்கு போட்ட பிச்சை என்பதை மறந்து விட வேண்டாம். உங்களுடைய திறமையை வைத்து நீங்கள் ஓட்டு வாங்கவில்லை. உங்களுக்கு ஓட்டு போடச் சொன்னது எங்களுடைய ஆயர்கள், கிறிஸ்தவ ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று உங்களுக்கு ஓட்டு போடச் சொன்னார்கள். பாஜக சார்பில் வெற்றி பெற்ற எம் ஆர் காந்தி செருப்பு போட மாட்டான், கேட்டால் பூமாதேவியை செருப்பு போட்டு மிதிக்க மாட்டானாம், ஆனால் நாம சூ போட்டது எதற்கு பாரதமாதா ஒரு அசிங்கம் அது நம்மை தோற்று விடக் கூடாது என்பதற்காக தான்,

மேலும் நமக்கு சொரி சிரங்கு எல்லாம் வந்து விடக்கூடாது என்பதற்காக தமிழக அரசு இலவச செருப்பு கொடுத்துள்ளது. இந்த பூமாதேவி ரொம்ப டேஞ்சரஸான ஆளு, சொரி, சிரங்கு பிடிக்கும் அதனால செருப்பு போட்டுக்கணும். நாங்கள் இப்போது 40 சதவிகிதத்தில் இருந்து 62 சதவீதமாக வந்துவிட்டோம், இன்னும் சில காலங்களில் 70 சதவீதமாக வந்து விடுவோம், எங்களை யாரும் தடுக்க முடியாது. இதை எச்சரிக்கையாக இந்து சகோதரர்களுக்கு சொல்ல விரும்புகின்றேன்.

மோடியின் கடைசி காலம் மிக மிக பரிதாபமாக இருக்கும், எழுதி வைத்துக் கொள்ளுங்கள், நாம் நம்புகின்ற கடவுள் உயிரோடு இருக்கிறார் என்றால் அமித்ஷா, மோடியை நாயும், புழுவும் சாப்பிடும் நிலையை வரலாறு காண வேண்டும். எங்கள் சாபம் உன்னை அழிக்கும் என எச்சரித்து இருந்தார். இதையடுத்து ஜார்ஜ் பொன்னையா மீது சட்ட விரோதமாக கூடுதல், சாதி, மதம் மற்றும் இரு தரப்பினரிடையே விரோதத்தை உருவாக்குதல், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துதல், மத நம்பிக்கைகள் மீது அவதூறு பரப்புதல் என 7 பிரிவுகளின் கீழ் அருமனை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து 5 தனிப்படைகள் அமைத்து தேடப்பட்டு வந்த நிலையில், மதுரை மாவட்டம் கள்ளிக்குடியில் பதுங்கியிருந்த பாதிரியாரை போலீசார் இன்று கைது செய்தனர்.மதபோதகர் ஜார்ஜ் பொன்னையா கைது குறித்து பல்வேறு அரசியல் தலைவர் வரவேற்று கருத்து தெரிவித்து வரும் நிலையில். பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் தனது டிவீட்டர் பக்கத்தில்.

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைதை வரவேற்கின்றேன். ஆனால் இந்து விரோத, இந்திய விரோத திமுக ஆட்சி தமிழகத்தில் நடைபெறும் காரணத்தால் தான் இதுபோன்ற விஷமிகள் ஊக்கம் பெறுகிறார்கள் என்பதே உண்மை. ஜார்ஜ் பொன்னையா தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும், திமுக தன்னை திருத்திக்கொண்டு இது போன்ற சக்திகளை ஒடுக்கி வைக்குமா.? என பேராசிரியர் கேள்வி எழுப்பியுள்ளார்.