கதர் கட்சியின் கால் கழுவி பிழைத்திட்ட மடமை யார்.? திமுகவை வெளுத்து வாங்கிய முக்கிய அரசியல் பிரபலம்.!

0
Follow on Google News

யாரடா அடிமை.. கூறடா எருமை…என்ற தலைப்பில் அதிமுக செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் திமுகவை வெளுத்து வாங்கி உள்ளார், தொடர்ந்து அதிமுகவை அடிமை கட்சி என திமுக விமர்சனம் செய்து வரும் நிலையில் மருது அழகுராஜ் பதிலடி கொடுத்துள்ளதாக தெரிகிறது, அவர் தனது டிவீட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, காங்கிரஸின் கால் பிடித்து காவிரி உரிமையைக் காவு கொடுத்த கயமை யார்.?

கச்சத்தீவை சிங்களருக்கு கை மாற்றும்போது கண்டும் காணாது இருந்த சொரணை கெட்ட எருமை யார்?, மதுரையில் வைத்து மண்டையை பிளந்து ரத்தத்தை மாதவிடாய் ரத்தம் என்று வர்ணனையும் செய்து விட்டு நேருவின் மகளே வருக என்று நெடுஞ்சாண்கிடையாக பாதத்தில் விழுந்து சூடு கெட்ட சிறுமை யார்.? ஈழத் தமிழினத்தை இரக்கமின்றி அழித்துவிட்டு இத்தாலி காங்கிரசுக்கு மத்தாளம் அடித்ததோடு, இரத்த வெறியன் ராஜபக்சே மாளிகையில் பல் இழித்து பந்தியில் அமர்ந்து தொந்தி நிரப்பி பரிசுப்பெட்டி வாங்கி வந்த ஆக்கம் கெட்ட அடிமை யார்?.

வால்மார்ட்டுக்கு வால் பிடித்து, உணவு பாதுகாப்பு மசோதாவுக்கு ஒத்து ஊதி, ஜல்லிக்கட்டு உரிமையை பறிகொடுத்து, மீத்தேன், கெயிலுக்கு தலையாட்டி, நீட்டுக்கு முட்டுக்கொடுத்து, கதர் கட்சியின் கால் கழுவி உழைத்திட்ட மானங்கெட்ட மடமை யார்?. தன் குடும்பம் வாழ்வதற்கு தமிழ் இன உரிமைகளை தாரைவார்த்த திருடர் குல திறமை யார்?.

ஆரூரர் குடும்பம் அடகு வைத்த காவேரியை போராடி மீட்டதும்…மின்வெட்டு இருட்டில் இருந்து தமிழ்நாட்டை மீட்டதும், மீத்தேனை துரத்தி கழனிவாழ் உலவினத்தை காத்தேன் என்னும் பெருமை சேர்த்ததும்.. ஜல்லிக்கட்டு உரிமை மீட்டு வாடிவாசல் திறந்து விட்ட வரலாறு படைத்ததும்… ஏரி குளங்களைத் தூர்வாரி கரிகாலன் காலத்தை கண் முன்னே படைத்ததும்.. சமனற்ற மேடு பள்ளத்தை சரிசெய்து சமூகநீதி வார்த்ததும் ஈரிலை இயக்கம் என்றிருக்க இப்போது சொல்லடா யாரடா அடிமை கூறடா எருமை. என மருது அழகுராஜ் தனது டிவீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.