முக அழகிரி சொன்னது நிஜமாகிவிட போகிறது.! முக ஸ்டாலினை சீண்டும் காயத்ரி ரகுராம்.!

0
Follow on Google News

திமுக தலைவர் முக ஸ்டாலின் குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றுள்ளது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது. தேர்தல் முடிந்து வெளியான உளவுத்துறை ரிப்போர்ட்டில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்கள் அவரிடம் தெரிவித்ததாகவும், இதனால் அப்செட் ஆன ஸ்டாலின் சோகத்தில் இருந்ததால் அவருடைய குடும்பத்தினர் அவருடைய கவலையை மறக்க கொடைக்கானல் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

மேலும் பலர் அடுத்தது திமுக ஆட்சி தான் என ஸ்டாலினுக்கு வந்த தகவலை தொடர்ந்து குடும்பத்துடன் கொடைக்கானல் சென்று அங்கே, மந்திரி சபை பட்டியல் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர், இந்நிலையில் முக ஸ்டாலின் குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றுள்ளது குறித்து பாஜகவை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் விமர்சனம் செய்துள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது, கொடைக்கானல் குடும்ப ஆலோசனையில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு முக்கிய துறைகளான பொதுப்பணி, மின்சாரம்,உள்ளாட்சி சுகாதாரம்,நெடுஞ்சாலை, வருவாய் உள்ளிட்ட வருவாய் வரும் துறைகளை ஒதுக்ககூடாதென முடிவெடுத்துள்ள ஸ்டாலினுக்கு கட்சிக்கு உழைக்கவும் தன்னை தலைவராக ஏற்றுக்கொள்ளவும் மட்டும் மூத்த நிர்வாகிகள் தயவு வேண்டும்.

ஆட்சி அதிகாரம் வந்த பின்பு தன் குடும்பத்தினர் பேச்சுக்கு கட்டுபட்டு நடக்கும் புதிய அடிமைகளை மந்திரியாக்க வேண்டும், கொத்தடிமைகளை வைத்து கொண்டு நீங்கள் அமைக்கபோவது மந்திரி சபையா குடும்ப சபையா என்பது மே 2முடிவுக்கு பிறகு தான் தெரியும் ,மக்கள் முடிவுக்காக காத்திருங்கள் ஸ்டாலின்,கனவு காணாதீர்கள் உங்கள் அண்ணன் சொன்னது போல நீங்கள் என்றுமே வருங்கால முதல்வர்தான் என்பது நிஜமாகிவிட போகிறது என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.