உதயநிதி ஒரு சுண்டைக்காய்.! கருவின் குற்றம் கருணாநிதி.! கண்டன ஆர்பாட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு.!

0
Follow on Google News

அரசியல் அநாகரிக நடவடிக்கைகளை தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்ற திமுகவை கண்டித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் மதுரையில் நடைபெற்றது, இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:- இந்தத் தைத்திருநாளில் கூட திமுக வை கண்டித்து நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மக்கள் திரண்டு இருப்பதைப் பார்த்தால் அநீதி எங்கே நடந்தாலும் அதைத் தட்டிக்கேட்கும் மாவட்டமாக மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் என்பதற்கு சாட்சியாக இக்கூட்டம் திகழ்கிறது.

நாம் ஆட்சி அதிகாரத்தில் இருந்தால்கூட ஜனநாயக கடமையை கடைப்பிடித்து வருகிறோம் உதயநிதியின் பக்குவமற்ற பேச்சு அநாகரித்தின் உச்சகட்டமாக உள்ளது தாயை தெய்வமாக வணங்கும் இனம் தமிழினம் அந்தத் தாயை முகம் சுளிக்கும் வகையில் பேசியது தமிழினமே வேதனைப் பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை உதயநிதிக்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன் ஆனால் இந்த பேச்சிற்கு திமுகவிற்கு ஜால்ரா போடும் கூட்டம் ஆமாம் சாமி போட்டு வருகிறது.

வருவாய் துறை அமைச்சராக இருந்த நாஞ்சில் மனோகரன் கருணாநிதியை கருவின் குற்றம் என்று கூறினார் எனக்கு அது தற்போது நினைவுக்கு வருவது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மக்களிடத்தில் வாக்குகள் பெற வேண்டும் என்றால் மக்களை சந்திக்க வேண்டும் ஆனால் கொரோனா காலத்தில் ஸ்டாலின் எங்கே போனார் நான்கு அறைக்குள் உட்கார்ந்து கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு கட்சிக்காரர்களிடம் மட்டும் பேசினார் ஸ்டாலின். தற்போது கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்ததுடன் தற்போது வெளியே வருகிறார் ஸ்டாலின் மக்கள் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்,

கருணாநிதி காலத்தில் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டம் ஒன்றை உருவாக்கினார்கள் மக்களை பிச்சைக்காரர்கள் ஆக்குவதற்காக இது உருவாக்கினார் என்பதை மக்களே சொன்னார்கள். உதயநிதி ஒரு சுண்டைக்காய் முதலமைச்சர் பற்றி பேச உதயநிதிக்கு என்ன தகுதி உள்ளது முதலமைச்சர் 49 ஆண்டுகால பொது வாழ்வில் மக்களுக்காக பல்வேறு சேவைகளை செய்து படிப்படியாக இன்று உயர்ந்துள்ளார்.திமுக ஆட்சிக்கு வர துடிக்கிறது மக்களுக்காக திமுக என்ன தியாகம் செய்தது என்பதை நாட்டு மக்களுக்கு திமுக கூற முடியுமா.

இன்றைக்கு கோயபல்ஸ் பொய் பிரச்சாரம் செய்துவரும் ஸ்டாலின் மற்றும் பெண்களை இழிவுபடுத்திப் பேசிய உதயநிதி ஆகியோருக்கு மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் கடும் கண்டனத்தை தெரிவித்து மட்டுமல்லாது. வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் இந்த தீயசக்தி திமுகவிற்கு சரியான சவுக்கடி நீங்கள் கொடுத்து மீண்டும் தமிழகத்தில் புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் புனித ஆட்சி மலர முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரின் வெற்றி சின்னமான இரட்டை இலைக்கு நீங்கள் வாக்களித்து அமோக வெற்றி பெற்றுத் தர வேண்டும். இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.