உதயநிதி அவனெல்லாம் ஒரு ஆளா.? ஆ.ராசா..உன்னுடைய ராஜா-ராணி கதையை எடுத்து விடுவேன்.! ராஜேந்திர பாலாஜி அதிரடி..

0
Follow on Google News

முதல்வர் பழனிசாமி மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களை மிக கீழ்த்தரமாக விமர்சனம் செய்த திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசாவின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில் அதிமுக முக்கிய தலைவர்கள் தொடர்ந்து அவர்களின் கண்டன பதிவுகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வழக்கம் போல் தனது பாணியில் வெளுத்து வாங்கியுள்ளார்.

செய்தியர்களை சந்தித்த ராஜேந்திரபாலஜியிடம், உதயநிதி குறித்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அவனெல்லாம் ஒரு ஆளா என்று ஒருமையில் பேசிய ராஜேந்திர பாலாஜி, திமுக மூத்த தலைவர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு போன்றவர்கள் உதயநிதியை சந்தித்து வாழ்த்து பெறுகின்றனர், கருணாநிதி பேரன் என்கிற அடையாளத்துடன் அரசியலுக்கு வந்தவர் உதயநிதி, ஆனால் முதல்வர் எடப்பாடி அவர்கள் படி படியாக அரசியலில் முன்னேறி வந்தவர்.

மேலும் திமுக தலைவர் ஸ்டாலின் 70 வயதில் முடி நட்டுள்ளார், இந்த வயதில் இது தேவையா.? யாராவது அவரை சைட் அடிக்க போகிறார்களா என நக்கல் செய்த ராஜேந்திர பாலாஜி. காற்று அதிகம் அடித்தால் அவருடைய தலையில் இருக்கும் முடி பறந்துவிடும் என்றும், மேலும் புரட்சி தலைவி அம்மா மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மரியாதை இல்லாமல் பேசினால் நாங்களும் அவர்களை இப்படி தான் பேசுவோம் என பேசியவர்.

ஆ.ராஜாவுக்கு தைரியம் இருந்தா ஸ்டாலினிடம் உனக்கு அறிவு இருக்கா.? காங்கிரஸ் ஆட்சியில் 2ஜி வழக்கில் என்னை தூக்கி சிறையில் வைத்தது காங்கிரஸ் கட்சி, மேலும் உங்க அம்மாவை விசாரணை நடத்தி கருணாநிதியை மிரட்டி தேர்தலில் போட்டியிட சீட் வாங்கிய காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கலாமா,? என்று கேட்க தைரியம் இருக்கா,.? என சரமாரியாக கேள்வி எழுப்பிய ராஜேந்திர பாலாஜி.

மேலும் ஆ ராசா ..இந்த ராஜா-ராணி கதையெல்லாம் எடுத்துவிடுவேன் என எச்சரித்தார், ஜனநாயக முறையில் அரசியல் ரீதியாக விமர்சனம் செய்தால் நாங்களும் அரசியல் ரீதியாக விமர்சனம் செய்வோம், அநாகரிகமாக விமர்சனம் செய்தால் நாங்களும் அதே போன்று தக்க பதிலடி கொடுப்போம் என திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் ஆ.ராசா இருவரையும் வெளுத்து வாங்கிய ராஜேந்திர பாலாஜி பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.