மகளின் முதலிரவு காட்சியை மாமியார் டெய்சியிடம் காண்பித்த மருமகன்…டெய்சி என்ன செய்தார் தெரியுமா.?

0
Follow on Google News

சமீபத்தில் திருச்சி சூர்யா மற்றும் டெய்சி ஆகிய இருவரும் பேசிய தொலைபேசி உரையாடல் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலாகி பெரும் விவாத பொருளாக மாறியது.இந்த விவகாரத்தில் பின்னணியில் நடிகை காயத்ரி ரகுராம் இருப்பதாக சில குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் அதிரடியாக நீக்கப்பட்டார்.

டெய்லி மற்றும் திருச்சி சூர்யா இருவருக்கும் இடையில் இடையில் நடந்த பிரச்சனை குறித்து பாஜகவில் இருந்து வெளியேற்றப்பட்ட காயத்ரி ரகுராம் பேட்டி ஒன்றில் பேசுகையில், திருச்சி சூர்யாவின் புகைப்படம் போஸ்டரில் சிறியதாக இடம் பெற்றிருந்ததால், டெய்லியை தொடர்பு கொண்டு அநாகரிகமாக பேசினார் என்று காயத்ரி தெரிவித்திருந்தார்.

ஆனால் திருச்சி சூர்யா விவகாரத்தில் அவருக்கு எதிராக திட்டமிட்டே டெய்சி, காயத்ரி போன்றார் செயல்பட்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாலை 6 மணிக்கு டெய்லியை தொடர்பு கொண்டு சூர்யா சண்டையிட்டது பின்னணியில் டெய்சி என்ன செய்தார் என்கின்ற தகவலும் தற்பொழுது வெளியாகியுள்ளது.

ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் இருவருக்கும் ஒரு மோதல் ஏற்படும்போது, அந்த சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, ஒரு பெண் என்கின்ற கேடயத்தை வைத்து, அந்த பிரச்சனையை முழுவதும் அந்த ஆணுக்கு எதிராக திருப்பி விட்டு அவரை குற்றவாளியாக்கிய சம்பவம் தான் டெய்சி மற்றும் சூர்யா விவகாரத்தில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

குறுகிய காலத்தில் பாஜகவில் இணைந்து மிகப்பெரிய வளர்ச்சியை பெற்று பிரபலமாக அறியப்பட்டவர் திருச்சி சூர்யா.இதற்கு காரணம் அவர் ஒரு அரசியல் பாரம்பரியமிக்க குடும்பத்திலிருந்து வந்ததால், சிறு வயதாக இருந்தாலும் அரசியலை மிக பக்குவமாக கையாண்டு வந்தார். . திமுகவுக்கு எதிராக துணிந்து சூர்யா போராடி வந்தது, திருச்சி மாவட்டத்தில் திமுகவை எதிர்த்து பாஜகவால் அரசியல் செய்யப்பட வேண்டும் என்றால் திருச்சி சூர்யா முக்கிய பங்காற்ற வேண்டும் என்கின்ற நிலையும் பாஜகவில் உருவாகியது.

இதனை தொடர்ந்து பாஜகவில் இருக்கும் டெய்ஸி உட்பட சிலர் சூர்யாவுக்கு எதிராக சதி திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. மேலும் சூர்யாவை திட்டமிட்டு பாஜகவில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்பதற்காக தொடர்ந்து சூரியாவை சீண்டும் வகையில் பல்வேறு செயல்களில் டெய்லி ஈடுபட்டு வந்துள்ளார். அதில் சூர்யா அன்று காலை 6 மணிக்கு டெய்லி தொடர்பு கொண்டு பேசுவதற்கு முன்பு, அன்று காலை 4 மணிக்கு சூர்யாவுக்கு வாய்ஸ் மெசேஜ் ஒன்றை டெய்சி அனுப்பியதாக கூறப்படுகிறது.

அதில் சூர்யாவை மிகவும் கடுமையாக திட்டியுள்ளார் டெய்லி, இதே போன்று இதற்கு முன்பும் சூர்யா குடும்ப உறுப்பினர்களை டெய்சி அநாகரிகமாக பேசியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அன்று அதிகாலை 6 மணிக்கு சூர்யா தொலைபேசியை எடுத்து பார்க்கும் பொழுது டெய்லி 4 மணிக்கு அனுப்பிய வாய்ஸ் மெசேஜ் கேட்டுள்ளார் சூர்யா.அதில் சூரியாவை மிக கடுமையாக அநாகரிகமாக பேசி அனுப்பி வைத்துள்ளார் டெய்லி.

இதனால் ஆத்திரம் அடைந்த சூர்யா உடனே டெய்லியை தொடர்பு கொண்டு சுமார் 19 நிமிடம் பேசியுள்ளார். இருவருமே சரமாரியாக மாற்றி மாற்றி திட்டிக்கொண்டனர். ஆனால் டெய்லி அவருக்கு சாதகமாக, சூர்யா திட்டிய சில நிமிடங்களை மட்டும் எடிட் செய்து அதை வெளியிட்டதாக கூறப்படுகிறது. டெய்லி விவகாரத்தின் பிண்ணனியில் காயத்ரி ரகுராம் போன்ற சிலர் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆடியோ விவகாரம் மூலம் பிரபலமான டெய்லி இதற்கு முன்பு பேட்டி ஒன்றில் தன்னுடைய மகளின் முதலிரவு குறித்து பேசிய வீடியோ ஓன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், அவர் பேசியதாவது, மகளின் ஒழுக்கத்திற்கு ஒரு உதாரணம், மகளுக்கு முதல் இரவு நடந்த அடுத்த நாள் நான், மகளிடம் என்ன.? எதுவாது நடந்ததா.? என்று கேட்டேன்.

அதற்கு என்னுடைய மருமகன், அத்தை இரவு பத்தரை மணிக்கு எல்லாம் தூங்கிவிட்டார், அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து வாக்கிங் சென்று விட்டார். என்று முதலிரவில் எதுவுமே நடக்கவில்லை என்று மருமகன் புகைப்படமாக தன்னிடம் காண்பித்ததாக டெய்லி பேசியுள்ளது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.