திருமாவளவன் பிறந்த நாள் கொண்டாட்டம்.. மின்சாரம் பாய்ந்து விசிக தொண்டர் இருவர் பலி….

0
Follow on Google News

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு விசிக கொடி கம்பம் அமைக்கும் பணியில் ஈடுபட்டவர்கள் மின்சாரம் பாய்ந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.இன்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு விசிக தொண்டர்கள் வெகு சிறப்பாக கொண்டாட இருந்தனர்.

இந்த நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி கிராமத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று இளையான்குடி காவல் நிலையம் எதிரட விசிக கொடிக்கம்பம் அமைக்கும் பணியில் நடைபெற்று வந்தது. இந்தப் பணியில் பிரபு, குழந்தை, அவையன், சங்கர், ஈடுபட்டு வந்தனர். பணியை விரைந்து முடிக்க மும்முரமாக செயல்பட்டு வந்தனர்.

இந்த கொடிக்கம்பம் அமைக்கும் பணி நடைபெறும் இடத்தில் மின்சாரம் வயர் இருந்தது. இந்த நான்கு நபர்களும் விசிக கொடிக்கம்பத்தை பொருத்தி கொண்டு இருந்தனர். தீடீர் என்று எதிர்பாராத விதமாக விசிக கொடிக்கம்பம் மின்சார வயரில் பட்டுவிட்டது. இதில் இருந்து மின்சாரம் இவர்கள் மீது பாய்ந்தது. அதில் பிரபு மற்றும் குழந்தை மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர்.

சங்கர் மற்றும் அவையன் பலத்த காயத்துடன் தப்பிய அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து இளையான்குடி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். விசிக தலைவரின் பிறந்தநாளை கொண்டாட நினைத்து தற்போது இரண்டு பேர் பலியான சம்பவம் இளையான்குடி சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.