அதிகம் பொய் பேசுவதில் சீமான், அருணனை பின்னுக்கு தள்ளி எம்பி ஜோதிமணி முதலிடம்..!வெளியானது அதிரடி சர்வே ரிப்போர்ட் .!

0
Follow on Google News

தமிழக அரசியல் தலைவர்களில், மக்களுக்கு பிடித்த தலைவர் யார்.? ஆளுமை மிக்க தலைவர் யார்.? எதிர்காலத்தில் யார் மக்கள் மத்தியில் இடம் பிடிக்க இருக்கும் அரசியல் தலைவர்.? தமிழக அரசியலில் யார் அதிகம் பொய் பேச கூடியவர்.? என தமிழக மக்களிடம் நமது தினசேவல் நியூஸ் சார்பில் கருத்துக்கள் கேட்கப்பட்டது, அது குறித்த முடிவுகள் என்ன என்பது பற்றியது தான் இந்த செய்தி.

தற்போது இருப்பதில் உங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர் யார் என மக்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அதிகம் பேர் தேமுதிக நிறுவனர் நடிகர் விஜயகாந்தை தெரிவித்தனர், அவர் தற்போது நல்ல உடல் நலத்துடன் இருந்திருந்தால், ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்கு பின் மக்களின் நம்பிக்கையானவராக திகழ்திருப்பர் என்றும், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று அவர் தான் முதல்வராக இருந்திருப்பார் என மக்கள் கருத்து தெரிவித்தனர்.

தற்போது இருக்கும் அரசியல் தலைவர்களில் ஆளுமை மிக்க தலைவர் யார் என மக்களிடம் கேட்க பட்டதில் பெரும்பாலோனோர், அப்படி யாரும் தற்போது இல்லை என்றே கருத்து தெரிவித்தனர், ஜெயலலிதா மற்றும் கருணாநிதி போன்ற ஆளுமைகளில் பாதி அளவு கூட தற்போது இருக்கும் அரசியல் தலைவர்களில் யாருக்கும் இல்லை என கருத்து தெரிவித்தவர்கள், அவர்கள் போன்ற ஆளுமைமிக்க தலைவர்கள் இனி தமிழகத்துக்கு கிடைக்குமா என்பது தமிழக மக்களின் ஏக்கமாக இருப்பதாக மக்கள் கருத்து தெரிவித்தனர்.

எதிர்கால தமிழக அரசியில் மக்கள் மத்தியில் இடம் பிடிக்க கூடிய தலைவர் யார் என கேக்கப்பட்ட கேள்விக்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மற்றும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பெயரை அதிகம் பேர் குறிப்பிட்டார்கள் அதில் அண்ணாமலையின் சமீப கால தொலைக்காட்சி பேட்டிகள் அவர் கேள்விகளை கையாளும் விதம் மிகவும் பிடித்ததாக மக்கள் தெரிவித்தனர், இதில் உதயநிதியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளார் அண்ணாமலை.

இதனை தொடர்ந்து தமிழக அரசியலில் அதிகம் பொய் பேசக்கூடிய அரசியல் தலைவர் யார் என மக்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கம்யூனிஸ்ட் அருணன், மற்றும் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி ஆகியோர் பெயரை அதிகம் பேர் குறிப்பிட்டார்கள், இதில் அனைவருடைய கருத்துக்களையும் கேட்ட பின் இறுதியாக கணக்கிட்டதில் சீமான் மற்றும் அருணனை பின்னுக்கு தள்ளி அதிகம் பொய் பேசும் அரசியல் தலைவர்களில் முதல் இடம் பிடித்துள்ளார் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி.

இதில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி ஒரு விஷயத்தை திரித்து கூறுவது, மேலும் எதிர் தரப்பில் இருப்பவர்கள் சொல்லாத ஒன்றை கூறியதாக பொய் பேசி அரசியல் செய்வது, இது போன்ற அதிகம் பொய் பேசும் பெண் அரசியல்வாதியை தமிழகம் முதல் முறையாக பார்க்கிறது என கருத்து தெரிவித்த தமிழக மக்கள், இவரிடம் பொய் பேசும் போட்டி வைத்தால் ஆண் அரசியல்வாதிகள் கூட தோற்று விடுவார்கள் என கருத்து தெரிவித்தது குறிப்பிடதக்கது.

எம்பிக்கள், ஜோதிமணி, சு.வெங்கடேசன் பொறுப்பற்ற செயலுக்கு பேராசிரியர் பதிலடி. இது இரண்டு புறமும் கூறுள்ள ஆயுதம்.. இது ஏற்புடையது அல்ல..