திமுகவுக்கு தரமான பதிலடி.! மதுரையில் பாஜக நிர்வாகி ஒட்டப்பட்ட போஸ்டரால் தலைகுனிந்த திமுகவினர்.!

0
Follow on Google News

சென்னை வடக்கு மாவட்டத்தை சேர்ந்த திமுக இளைஞரணி நிர்வாகி ஒருவர் அப்பகுதியில், பாஜகவுக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்யும் நோக்கில் சுவர் விளம்பரம் செய்திருந்தார், அதில் மத்திய பாஜக அரசு அமல்படுத்தியுள்ள நீட் தேர்வு, புதிய கல்வி கொள்கை, புதிய வேளாண் மசோதா, GST, மற்றும் குடியுரிமை சட்டம் ஆகியவற்றை திமுக எதிர்த்து வரும் நிலையில் ஒட்டு மொத்த தமிழகமும் எதிர்ப்பது போன்றும், தமிழக மக்கள் பாஜகவுக்கு எதிராக இருப்பது போன்று ஒரு பிம்பத்தை உருவாக்கும் முயற்சியில் பாஜகவுக்கு எதிராக திமுக நிர்வாகி சுவர் விளம்பரம் செய்திருந்தார்.

இந்த சுவர் விளம்பர புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அனைத்து மாவட்ட இளைஞரணி நிர்வாகிகளும் இதுபோன்ற விழிப்புணர்வு சுவர் விளம்பரங்களைச் செய்வார்கள் என நம்புகிறேன் என பதிவு செய்து தனது கட்சி நிர்வாகிகளை இது போன்ற அவதூறு சுவர் விளம்பரம் செய்ய தூண்டும் விதத்தில் தனது கருத்தை உதயநிதி பதிவு செய்திருந்தார்.

இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே சில இடங்களில் திமுக நிர்வாகிகள் இது போன்று சுவர் விளம்பரம் செய்திருந்தனர், அதில் கோ பேக் மோடி என்ற வாசகமும் எழுதப்பட்டிருந்தது, இந்நிலையில் தொடர்ந்து தனது கட்சி நிர்வாகிகளின் சுவர் விளம்பரத்தை தனது டிவீட்டர் பக்கத்தில் பதிவு செய்து உதயநிதி ஸ்டாலின் பாராட்டி வந்த நிலையில் கரூரில் பாஜக துணை தலைவர் அண்ணாமலை IPS எச்சரிக்கையை தொடர்ந்து சுவர் விளம்பரம் அழிக்கப்பட்டது.

ஆனால் மற்ற இடங்களில் சுவர் விளம்பரம் அழிக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் திமுகவின் இந்த அவதூறு சுவர் விளம்பரத்திற்கு பதிலடி தரும் விதத்தில் பாஜக இளைஞரணி செயலாளர், Dr.சங்கரபாண்டி மதுரை மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது, அதில் திருடர் முன்னேற்ற கழகம் என்ற தலைப்பில், ஓசி பிரியாணி, 2ஜி ஊழல், கடப்பா கல், பியூட்டி பார்லர், நில அபகரிப்பு, துண்டு சீட்டு, மற்றும் கோ பேக் ஸ்டாலின் போன்ற வாசகங்கள் அடங்கியுள்ளது.

இந்நிலையில் மதுரை முழுவதும் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்ட்டரினால் திமுகவினருக்கு மிக பெரிய தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது, தேவையின்றி பாஜகவை சீண்டி தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்டார் உதயநிதி என்று பொது மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர், மேலும் மதுரை முழுவதும் பாஜக நிர்வாகி Dr.சங்கரபாண்டி ஒட்டப்பட்டியுள்ள போஸ்டரை அவ்வழியாக வாகனத்தில் செல்பவர்கள் வாகனத்தை நிறுத்தி அந்த போஸ்டருடன் செல்பி எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.