ஊழல் புகார்களால் 23 ஆண்டுகள் மக்கள் திமுகவை தண்டித்துள்ளனர், இனியும் தண்டிப்பார்கள்.! மக்களை பற்றி ஸ்டாலினுக்கு கவலை கிடையாது.!

0
Follow on Google News

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் மகளிர் சுயஉதவிக் குழுவினர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசியதாவது:-ஸ்டாலின் துணை முதலமைச்சராகவும், உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இருந்தபோது நாட்டு மக்களுக்கு இவ்வளவு பிரச்சனை இருக்கிறதென்று ஏன் நீங்கள் எண்ணவில்லை? ஏனென்றால், நாட்டு மக்களைப் பற்றி அவர் கவலைப்பட்டதே கிடையாது, எப்போதும் வீட்டு மக்களைப் பற்றித்தான் அவர் சிந்திப்பார்.

அதனால்தான் இப்போது நாங்கள் மக்களிடம் சென்று மனுக்களைப் பெற்று அதற்குத் தீர்வு காண்கிற நிலையை உருவாக்கிய காரணத்தால்தான், திமுகவினர் மக்களை சந்திக்கக்கூடிய சூழ்நிலையை அதிமுக உருவாக்கியுள்ளது. இல்லாவிட்டால் மக்களைப் பார்க்கவேமாட்டார் என தெரிவித்தார், இதே போன்று ஊழலுக்காக உலக அளவில் இடம் பிடித்த ஒரே கட்சி திமுக என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- ஊழல் வரலாற்றில் உலக அளவில் இடம் பிடித்த ஒரே கட்சி திமுக.பஞ்ச பூதத்திலும் ஊழல்,கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு என மக்கள் உடமைகளை ஈவு, இரக்கமின்றி பறிக்கும் கட்சி திமுகதான். தமிழ்நாட்டில் ஊழலை அறிமுகம் செய்ததும் இந்த திமுகதான். ஒவ்வொரு முறை அதிகாரத்திற்கு வரும்போதும் ஒவ்வொரு விதமான ஊழல், உலக அளவில் ஊழல் வரலாற்றில் இடம் பிடித்த கட்சியும், ஆட்சியும் திமுகதான்.

திமுகவினர்,எங்கள் மீதான் ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை.தண்டனை அனுபவிக்கவில்லை.விவாதிக்க தயாரா? என்று பயத்தில் நடுங்கி உளறுவார்கள். நெருப்பில்லாமல் புகையாது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பட்டிலிட்ட ஊழல் புகார்களால் 13 ஆண்டுகள், அலைக்கற்றை ஊழலால் 10 ஆண்டுகள் என 23 ஆண்டுகள் ஆட்சி, அதிகாரத்தை கொடுக்காமல் மக்கள் திமுகவை தண்டித்துள்ளனர். இனியும் தண்டிப்பார்கள். இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.