கே எஸ் அழகிரி பல் இல்லாத பாம்பு… திருமாவையும் வெச்சு செய்த தரமான அண்ணாமலை வைரல் வீடியோ…

0
Follow on Google News

அண்ணாமலை தமிழக பா ஜ க வை திமுக வில் இணைப்பதற்கு தேதி குறித்துவிட்டாரா? 100 % மதிப்பெண் கொடுத்துள்ளாரே என தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கருத்து தெரிவித்திருப்பது குறித்து பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது, கே எஸ் அழகிரி அவர்கள் நாளை காங்கிரஸ் போராட்டம் என்று அழைத்தால் ஒரு பத்து பேர் வருவார்கள்.

கோவையில் காங்கிரஸ் சார்பில் ஏர்கலப்பை போராட்டம் என்று ஒன்று நடத்தினார்கள், அதன் பின்பு சமீபத்தில் காங்கிரஸில் இணைந்த ஒரு ஐஏஎஸ் அதிகாரி ஏர்கலப்பை போராட்டம் ஒரு நாடகம் என அவர் குறிப்பிடுகிறார். ஒரு பல் இல்லாத பாம்பாக காங்கிரஸ் கட்சியில் கே எஸ் அழகிரி இருக்கின்றார். அவர் கட்சியில் அவரின் இடது புறம் இருப்பவர் அடுத்த பாரத பிரதமரா முகஸ்டாலின் வரவேண்டும் என கூறுகிறார் .

வலதுபுறம் இருப்பவர் இந்தியாவின் விடிவெள்ளி மு க ஸ்டாலின் என சொல்கிறார், மற்றொருவர் முதல்வர் முக ஸ்டாலினுக்கு கடிதம் எழுதுகிறார் உங்கள் மகனை உடனே அமைச்சர் ஆக்குங்கள் என்று. அவர்கள் மீது கூட நடவடிக்கை எடுக்க முடியாமல், கட்சிக்குள்ளேயே இருந்து தன்னை பழித்துப் பேசுபவர்களை கூட வைத்துக்கொண்டு ஒரு பல் இல்லாத பாம்பாக கே எஸ் அழகிரி இருக்கின்றார். அதனால் அவருடைய புகழ் பல்லாண்டு வாழ்க என பத்திரிக்கை நண்பர்கள் மூலமாக சொல்லிக் கொள்கிறேன்.

ஆன்மிகம் குறித்து திருமாவளவன் சமீபத்தில் பேசியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை பேசியதாவது, திருமாவளவன் அம்பேத்கரைப் பற்றி தெரியாமலேயே இத்தனை காலம் அம்பேத்கர் பற்றி பேசுகிறார், இதில் ஒரு அழகு என்னவென்றால் ஜிஎஸ்டி பற்றி தெரியாமலே ஐந்து வருடம் ஜிஎஸ்டி பற்றி பேசியுள்ளார்.

இந்த வார்த்தையை சொன்னதுக்கப்புறம் தான் புரிந்தது அவருக்கு ஆன்மிகத்தைப் பற்றியும் தெரியவில்லை என்று, எல்லா விஷயத்துலயும் மதத்தை கலந்து அரசியல் செய்ய வேண்டும் என திருமாவளவன் நினைத்துக் கொண்டிருக்கிறார் அது தமிழகத்தில் நடக்காது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசிய வைரல் வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கே எஸ் அழகிரி பல்லு இல்லாத பாம்பு…. சங்கி என்பது தவறான வார்த்தையா.? தமிழக காவல் துறைக்கு இது அழகல்ல..