இந்த செயல் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும்..! முதல்வருக்கே அறிவுரை வழங்கி அட்வைஸ் செய்கிறாரா ஜோதிமணி.?

0
Follow on Google News

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஆண்டுதோறும் அந்த ஒரு நாளில் மட்டும் தமிழ்நாட்டில் இறைச்சி கடைகள் மூடப்படுவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில், தீபாவளி கொண்டாடப்படும் நாளான நவம்பர் 4-ந் தேதிதான் மகாவீர் ஜெயந்தியும் கொண்டாடப்பட உள்ளது. இதனால், நடப்பாண்டில் தீபாவளி தினத்தில் சென்னையில் இறைச்சி கடைகள் திறக்கப்படாது என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இறைச்சி கடை உரிமையாளர்கள், பொதுமக்கள் உள்பட பலதரப்பினரும் தீபாவளி தினத்தன்று இறைச்சி கடைகளை திறக்க வேண்டும் என வலியுறுத்தியதை தொடர்ந்து, கோரிக்கைகளைப் பரிசீலித்து தீபாவளி நாளன்று தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இறைச்சி கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது. அதேவேளையில் ஜெயின் மதத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளிலுள்ள இறைச்சி கடைகளும், ஜெயின் மத வழிபாட்டுத் தளங்களைச் சுற்றியுள்ள இறைச்சி கடைகள் மூடப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதற்கு கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கருத்து தெரிவித்திருந்தார். அதில்,சைவத்தைப் போல அசைவமும் ஒரு உணவுமுறைகோவில்களில் கிடாய்வெட்டிப் பொங்கல் வைக்கும் மரபு நம்முடையது. அப்படியிருக்கும்போது ஒரு குறிப்பிட்ட மதத்தினர் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் இறைச்சி கடைகள் மூடப்படும் என்று தமிழக அரசு சொல்வது ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும் என முதல்வர் முக ஸ்டாலினுக்கு அறிவுரை வழங்கிய ஜோதிமணி மேலும், பெரும்பான்மை வாதம் ஆபத்தானது.

பெரும்பான்மையோர் அசைவம் சாப்பிடுவதால் சைவம் சாப்பிடுபவர்களது பழக்கத்தை கேள்விக்குள்ளாக்க முடியாது. அப்படிசெய்யவும் கூடாது.அதேபோல் தான் இதுவும். ஒவ்வொருடைய தனிப்பட்ட நம்பிக்கைகளும் வீட்டிற்குள் தான் இருக்கவேண்டும். பொதுவெளியில் அல்ல.நமது மண்ணில் நமது மரபும்,நமது கலாச்சாரமும்,வாழ்வியலும் போற்றிப் பாதுகாக்கப்படவேண்டும். தமிழக அரசு இம்மாதிரியான நிர்ப்பந்தங்களுக்குப் பணியக்கூடாது.

தமிழக மண்ணில் இதுபோன்ற உணவுத் தூய்மைவாத ஆர்எஸ்எஸ் சிந்தனைகளை ஊக்குவிக்கக்கூடாது.அது நீண்டகால நோக்கில் நமது மண்ணிற்கும்,மரபிற்கும்,எதிர்காலத்திற்கும் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு எச்சரிக்கை விடுக்கும் விதத்தில் தனது கருத்தை கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.