பிரிவினைவாத பாவாத்மாக்கள் ஜெய் ஹிந்தை உச்சரிக்காமல் இருப்பதே நலம்.! வெளுத்து வாங்கிய நடிகை கஸ்துரி..

0
Follow on Google News

சட்டமன்ற கூட்ட தொடரில் சட்டமன்ற உறுப்பினர் கொங்கு ஈஸ்வரன் ஜெய் ஹிந்த் குறித்து பேசிய பேச்சு பெரும் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், நடிகை கஸ்துரி இது குறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ளார் அதில், ஹிந்த் என்றால் ஹிந்தியாம், இந்து வாம் ! நமது சுயமரியாதை பகுத்தறிவுச்செல்வங்கள் அதை சொல்ல மாட்டார்களாம்! தமிழ் பெயர்ச்சொல்லான பாரதம் என்றும் சொல்ல மாட்டார்களாம். ஆங்கில சொல் இந்தியா என்பது மட்டும் தான் செல்லுமாம் ! “இந்தியா’ என்பதில் இந்து என்ற தொனி இல்லையா என்ன ? ஹைய்யோ ஹைய்யோ. அரைவேக்காட்டு புரிதல்களுக்கு விளக்கம் குடுப்பது நம் கடமையும் ஆகிறது.

‘ஹிந்த்’ என்ற சொல்லின் வரலாறு :
பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பாரசீகர்கள் ‘சிந்து’ நதி ஓடும் நாட்டை குறிக்க பயன்படுத்திய பெயர் “ஹிந்து’. அந்த காலத்தில் இந்தியாவின் பல பிரதேசங்களுக்கு ஜம்புதீபம், பாரதவர்ஷம் போன்ற பெயர்களும் வழக்கில் இருந்தன. சப்தசிந்து நதிகள் சங்கமிக்கும் நமது பாரததிருநாட்டை கப்பல்வழி வணிகத்தில் ஈடுபட்டிருந்த பாரசீகர்களும் அரேபியர்களும் துருக்கியர்களும் ‘ஹிந்த்’ என்று அழைத்தார்கள். அவர்கள் மூலம் ‘ஹிந்த்’ என்ற நாட்டை பற்றி முதன்முதலில் மேல்நாட்டிற்கு தெரிந்தது.

பண்டைய ரோமானிய வரலாற்று ஏடுகளில் ‘இண்டஸ்’, ‘இந்து’ என்ற பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பின்னர் அலை அலையாக வந்து நம்மை ஆண்ட இஸ்லாமிய மன்னர்கள் மொத்த இந்தியாவையும் தங்கள் சாம்ராஜ்ஜியத்தின் கீழ் கொண்டுவந்தார்கள். இன்றைய ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான், பர்மா, வங்கம், காஷ்மீரம், தென்னிந்தியா அனைத்தையும் உள்ளடக்கிய மிகபெரிய நாட்டை ஹிந்துஸ்தான் என்று அழைத்தார்கள். இந்து மதம், இந்தி மொழி எல்லாம் இந்திய நாட்டின் பெயரால் வந்தவையே அன்றி இந்திய நாட்டின் பெயர் எந்த மொழியிலிருந்தோ மதத்திலிருந்தோ வந்தது அல்ல.

ஜெய் ஹிந்த் என்ற சொற்றோடொரின் வரலாறு :
தமிழர் ஷெண்பகராமனால் உருவாக்கப்பட்டு, ஹைதெராபாத் இஸ்லாமியர் ஜைனுலாபிதீன் ஆல் பரிந்துரைக்கப்பட்டு நேதாஜி சுபாஷ் சந்திரா போஸ் ஆல் நம் சுதந்திரப்போரின் வெற்றிமுழக்கமாக மாறியது ஜெய் ஹிந்த் ! இந்திரா காந்தி அம்மையார் எந்த உரையையும் மூன்று முறை ஜெய் ஹிந்த் என்றே முடிப்பார். இன்று நம்மை காக்கும் பட்டாளத்திலும் வணக்கத்துக்கு பதில் ஜெய் ஹிந்த் என்ற எழுச்சிமிகு முழக்கம் வழக்கத்தில் உள்ளது.

ஜெய் ஹிந்த் என்று பெருமையாக சொல்ல இந்தியர் ஒவ்வொருவரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் ! தமிழில் வெல்க பாரதம் என்று சொல்லலாம் ! வெல்க இந்தியா எனலாம். அந்த மந்திர சொற்களை பிரிவினைவாத பாவாத்மாக்கள் உச்சரிக்காமல் இருப்பதே நலம்! இதில் மொழி மத அரசியலுக்கோ கட்சி கூப்பாடுகளுக்கோ இடமேயில்லை !