மகளின் மனம் கவர்ந்த மத்திய அமைச்சர் யார்.? வைரலாகும் ஜெயலலிதா பேசிய வீடியோ உள்ளே…

0
Follow on Google News

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போது கூட்டணியில் இருந்த திமுக செய்த 2ஜி ஊழல் மற்றும் திமுக மீது உள்ள ஊழல் குற்றசாட்டு குறித்து முதல்வர் பழனிசாமி சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசியதற்கு, திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராஜா திமுக ஊழல் செய்யவில்லை இது தொடர்பாக நேரடியாக விவாதம் நடத்த முதல்வர் பழனிச்சாமி தயாரா.? என சவால் விடுத்தவர் வாருங்கள் கோட்டையில் விவாதத்தை வைத்து கொள்ளலாம் என அழைப்பு விடுத்தார் ஆ.ராஜா.

மேலும் நேற்று மீண்டும் இது குறித்து ஆ.ராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘’மூணு நாளுல என்னை கூப்பிடுங்கன்னு சொன்னேன். முதலமைச்சர் ஏன் என்னை கூப்பிடல. 2ஜியில் ஊழல், சர்க்காரியாவில் ஊழல், என்று என்னைக்கேட்டது யாரு. நீதானே சொன்ன.. முதலைமைச்சர் நீதான சொன்ன.. திமுக ஊழல் பண்ணல உங்க ஆத்தாதான் ஊழல் பண்ணி ஜெயிலுக்கு போச்சுன்னு சொன்னேன். அரசியல் சட்டத்தை படுகொலை செய்த மன்னிக்க முடியாத கொள்ளைக்காரி.

கொள்ளையடிக்கணும் என்பதற்காகவே சசிகலா, திவாகரன், இளவரசியை தன் வீட்டுக்கு அழைத்துவந்து, புதிய புதிய போலி செல்போன் கம்பெனிகளை உருவாக்கி, அந்த கம்பெனிகளின் வாயிலாக பல நூறு கோடி ரூபாயை கொள்ளையடித்தவர் ஜெயலலிதா. அரசியலில் அவர் இருந்தது அசிங்கம்.. அப்படி நான் சொல்லவில்லை. உச்சநீதிமன்றம் சொல்லி இருக்கிறது. அந்த ஆத்தா படத்தை(ஜெயலலிதா) தூக்கொண்டு திரிந்தால் என்ன அர்த்தம். ஆத்தா மாதிரியே ஊழல் பண்ணுவேன்.. ஆத்தா மாதிரியே ஊழல் பண்ணுவேன்னு அர்த்தமா? என அநாகரீமாக பேசினார் ஆ.ராசா.

இந்நிலையில் ஆ.ராசாவின் இந்த பேச்சு ஒருபக்கம் இருக்க மறுபக்கம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேசிய வீடியோ ஓன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது, அதில், ஜனநாயக நாடுகள் அனைத்திற்கும் சென்று ஆராய்ச்சி செய்து பாருங்கள், எந்த நாட்டிலாவது தகப்பன் முதலமைச்சர், மகன் துணை முதலமைச்சர் மற்றொரு மகன் மத்திய அமைச்சர், பேரன் மத்திய அமைச்சர், மகள் நாடாளுமன்ற உறுப்பினர்,

மகளின் மனம் கவர்ந்தவர் மத்திய அமைச்சர் என்று ஒரே குடும்பத்தில் பலர் அத்தனை பதவிகளை ஆக்கிரமித்துக் கொண்டு, அழுக்கைத் தின்கின்ற மீன்கள் போல அதிகாரத்தைக் தின்கின்ற இதுபோன்ற குடும்பம் ஒன்று உலகத்தில் வேறு எந்த மூலையிலாவது இருக்கிறதா.? என கருணாநிதி குடும்பம் குறித்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.