மதுரைக்கு புதிய பாஜக தலைவராக முன்னாள் எம்எல்ஏ டாக்டர்.சரவணன்… விமர்சையாக கொண்டாடி வரும் பாஜக தொண்டர்கள்…

0
Follow on Google News

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மதுரை நகர் மாவட்ட புதிய பாஜக தலைவராக டாக்டர்.சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பொறுப்பு ஏற்றதில் இருந்து பாஜகவில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் புதிதாக 8 மாவட்ட தலைவர்களை நியமித்துள்ளார்.

இதில் மதுரை மாவட்ட நகர் மாவட்ட புதிய தலைவராக டாக்டர்.சரவணனை நியமித்துள்ளார். இவர் ஒரு மருத்துவர். பல வருடங்களாக மதுரை மற்றும் சுற்றுப்புற மக்களுக்கு மருத்துவ சேவை மற்றும் சமூக பணி ஆற்றி வருகிறார். இவர் 2019ம் ஆண்டு திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

திமுக எம்எல்ஏ வாக இருந்து திருப்பரங்குன்றம் தொகுதிகளில் தனது சொந்த செலவில் பல மக்கள் நல பணிகளில் ஈடுபட்டார், ஆனால் திமுக தலைமை இவருக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் மறுக்கப்பட்டு புறக்கணித்தது. இதனால் திருப்பரங்குன்றம் தொகுதியின் 2021 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கி வெற்றி வாய்ப்பை இழந்தது திமுக.

ஆனால் பாஜக டாக்டர் சரவணனுக்கு சரியான அங்கீகாரம் அளிக்கும் வகையில், தற்போது பாஜக மதுரை நகர் மாவட்ட தலைவராக நியமித்துள்ளது. இதனால் பாஜக மேலும் வலுவடையும் என்பதால் மதுரை மாவட்ட பாஜகவினர் இதை விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள்.புதியதாக மதுரை நகர் மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்ட மருத்துவர் சரவணன் பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றது குறிப்பிடதக்கது.