கூவத்தூரில் ஊத்திக்கொடுத்தவன் தான் டிடிவி தினகரன்.! அவன் குலத்தொழிலே அது தான்.! வெளுத்து வாங்கிய சி.வி.சண்முகம்.!

0
Follow on Google News

செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது, பச்சைத் துண்டு போட்டுக் கொண்டால் ஸ்டாலின் விவசாயி ஆகி விட முடியாது. விவசாயத்தை பற்றி தெரிந்தவர் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. எவ்வளவு பணிச் சுமை இருந்தாலும் தனது கிராமத்திற்கு இன்றும் சென்று விவசாயத்தை கவனித்து வருகிறார். இதைப் பார்த்தாலே மக்களுக்கு உண்மையான விவசாயி யார் என்று தெரிந்து விடும். ஸ்டாலின் அம்பானி வீட்டுப் பிள்ளை. அவருக்கு விவசாயத்தை பற்றி ஒன்றும் தெரியாது.

கூவத்தூரில் ஊத்திக்கொடுத்து கூத்தாடி குடியை கெடுத்தவர் தான் டிடிவி தினகரன். அவரிடம் இருந்து சசிகலா தப்பித்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார் அமைச்சர் சி.வி.சண்முகம், மேலும் அவர் கூறுகையில், அண்ணா திமுகவை கைப்பற்றுவோம் என்று வீரர் சூரர் டிடிவி தினகரன் தெரிவித்து வருகிறார், அண்ணா திமுகவை கைப்பற்றுவது இருக்கட்டும், முதலில் சசிகலாவுக்கு ஒரு எச்சரிக்கை முதலில் தினகரன் இடமிருந்து உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

தினகரன் அடிக்கடி சொல்லுவார் ஸ்லீப்பர் செல் வைத்திருக்கிறேன் என்று, அப்படி எந்த ஒரு ஸ்லிப்பர் செல்லும் கிடையாது. ஆனால் நாங்கள் ஓப்பன் செல் வைத்திருக்கிறோம், அந்த ஓபன் செல் யார் என்றால் இந்த வெட்டு வெத்து டிடிவி தினகரன் தான, அவனிடமிருந்து சசிகலாவையும் அவர்கள் குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள், ஏனென்றால் இந்த தினகரனை நம்பித்தான் கட்சி ஆட்சியை என அனைத்தையும் சசிகலா நம்பி ஒப்படைத்து சென்றார்.

மகாராசா இதை நன்றாக பார்த்துக்கொள், இதை அப்படியே அலுங்காமல் குலுங்காமல் நான்கு வருடம் கழித்து நான் தண்டனை முடிந்து வரும் போது என்னிடம் நீ கொடு என்று சொல்லிவிட்டு தான் சிறைக்கு சென்றார் சசிகலா, ஆனால் ஒரே மாதத்தில் கூத்தாடி கூத்தாடி போட்டு உடைத்த கதை போன்று உடைத்தான் தினகரன். முதலில் அவன் குடும்பத்தில் ஒற்றுமையை காப்பாற்றி வேண்டும் மேலும் என்னை நிதானமாக பேசினாரா என்று தொடர்ந்து டிடிவி தினகரன் கூறி வருகிறான்.

அவர்தான் எனக்கு ஊத்தி கொடுத்தாரா.? ஏனென்றால் அவன் தொழில் அதுதானே, டிடிவி தினகரனின் குலத்தொழில் ஊத்தி கொடுப்பது தான், ஊற்றிக்கொடுத்து குடியை கெடுத்தவர் தான் டிடிவி தினகரன், கூவத்தூரில் இதுமாதிரிதான் ஊத்தி கொடுத்தான் தினகரன், இல்லை என்று சொல்ல முடியுமா? அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஒன்றரை கோடி தொண்டர்களால் உருவாக்கப்பட்டது. எந்த ஒரு காலத்திலும், எந்த ஒரு சூழ்நிலையிலும் மீண்டும் ஒரு குடும்பத்திடம் ஒப்படைத்து சிக்கிக் கொள்ள மாட்டோம் என தெரிவித்தார் அமைச்சர் சி.வி.சண்முகம்.மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .