திமுக வெற்றி நாங்க போட்ட பிச்சை…. அமித்ஷா, மோடி உடல்களை புழுக்கள் சாப்பிட வேண்டும்.! மதபோதகர் மீது போலீஸ் புகார்..

0
Follow on Google News

மத போதாகர் ஜார்ஜ் பொன்னையா சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வீடியோ ஓன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அவர் பேசியதாவது. அமைச்சர் சேகர் பாபுக்கு ஒன்று சொல்கிறேன் நீங்கள் எத்தனை கோவிலுக்கு குடமுழுக்கு கொடுத்தாலும், அமைச்சர் மனோ தங்கராஜ் சொல்கின்றேன் எத்தனை கோவிலுக்கு துணி உடுத்தாமல் சாமி நீங்கள் கும்பிட்டாலும், ஒருத்தன் கூட உங்களுக்கு ஓட்டு போட மாட்டான்.

மண்டைக்காடு பக்தனும் உங்களுக்கு போட போடுவது கிடையாது, இந்துக்களும் உங்களுக்கு ஒட்டு போட போடுவது கிடையாது.நீங்கள் வெற்றி பெற்றது கிறிஸ்துவ மக்களும், முஸ்லிம் மக்களும் உங்களுக்கு போட்ட பிச்சை என்பதை மறந்து விட வேண்டாம். உங்களுடைய திறமையை வைத்து நீங்கள் ஓட்டு வாங்கவில்லை. உங்களுக்கு ஓட்டு போடச் சொன்னது எங்களுடைய ஆயர்கள், கிறிஸ்தவ ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று உங்களுக்கு ஓட்டு போடச் சொன்னார்கள்.

பாஜக சார்பில் வெற்றி பெற்ற எம் ஆர் காந்தி செருப்பு போட மாட்டான், கேட்டால் பூமாதேவியை செருப்பு போட்டு மிதிக்க மாட்டானாம், ஆனால் நாம சூ போட்டது எதற்கு பாரதமாதா ஒரு அசிங்கம் அது நம்மை தோற்று விடக் கூடாது என்பதற்காக தான், மேலும் நமக்கு சொரி சிரங்கு எல்லாம் வந்து விடக்கூடாது என்பதற்காக தமிழக அரசு இலவச செருப்பு கொடுத்துள்ளது. இந்த பூமாதேவி ரொம்ப டேஞ்சரஸான ஆளு, சொரி, சிரங்கு பிடிக்கும் அதனால செருப்பு போட்டுக்கணும்.

நாங்கள் இப்போது 40 சதவிகிதத்தில் இருந்து 62 சதவீதமாக வந்துவிட்டோம், இன்னும் சில காலங்களில் 70 சதவீதமாக வந்து விடுவோம், எங்களை யாரும் தடுக்க முடியாது. இதை எச்சரிக்கையாக இந்து சகோதரர்களுக்கு சொல்ல விரும்புகின்றேன். மோடியின் கடைசி காலம் மிக மிக பரிதாபமாக இருக்கும், எழுதி வைத்துக் கொள்ளுங்கள், நாம் நம்புகின்ற கடவுள் உயிரோடு இருக்கிறார் என்றால் அமித்ஷா, மோடியை நாயும், புழுவும் சாப்பிடும் நிலையை வரலாறு காண வேண்டும். எங்கள் சாபம் உன்னை அழிக்கும் என சர்ச்சைக்குரிய வகையில் மத போதாகர் ஜார்ஜ் பொன்னையா பேசியிருந்தார்.

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மத போதகர் போதாகர் ஜார்ஜ் பொன்னையா மீது நடவடிக்கை எடுக்க கன்னியாகுமரி மாவட்ட மாநகராட்சி துணை தலைவர் வழக்கறிஞர் சிவகுமார் போலீஸ் புகார் தெரிவித்துள்ளார். அவர் புகார் மனுவில் தெரிவித்ததாவது, 18.07.2011 அன்று அருமனையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் போதாகர் ஜார்ஜ் பொன்னையா என்பவர் பேசும் போது இந்துக்களையும், இந்து சமுதாயத்தையும் இழிவுபடுத்த வேண்டும் என்ற கெட்ட எண்ணத்திலும்,

பாரத தேசத்தையும், பாரத மாதாவையும் கொச்சைப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்திலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் எப்படியாவது மதக் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கெட்ட எண்ணத்திலும் நாங்கள் அன்றாடம் அன்னையாக நினைத்து வழிபட்டு வருகின்ற “பாரதமாதா மிகவும் அசிங்கமானவன் அவளை மிதித்தால் சொறி, சிரங்கு ஏற்படும். பூமாதேவி மிகவும் Dangers ஆனவள் ஆகவே தான் அந்த சொறி, சிரங்கு பிடித்துவிடக் கூடாது என்பதற்காக நாங்கள் காலில் செருப்பு அணிந்துள்ளோம் என பேசி நாங்கள் வழிபட்டு
வரும் பூமாதேவியை மிகவும் கேவலமாகவும் அசிங்கமாகவும் விமர்சித்து பேசியுள்ளார்.

மேலும் சுசிந்திரம் தாணுமாலையன் சுவாமி திருக்கோவிலுக்கு சென்று சட்டையில்லாமல் ஆண்கள் வழிபடுவதை பைத்திக்காரத்தனம் எனவும் சட்டையில்லாமல் வழிபடுபவனை கிருக்கன் எனவும் பேசி இந்துக்கள் மனதை மிகவும் புண்படுத்தியதோடு இந்துக்களின் மத நம்பிக்கையும், வழிபாட்டு முறையுைம்
இழிவுபடுத்தியுள்ளார்”. இதனால் இந்துக்களாகிய எங்களுடைய மனது மிகவும் புண்பட்டதோடு மனவேதனைக்கு ஆளாகியுள்ளோம். எனவே மேற்படி போதகா ஜார்ஜ் பொன்னையா மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.