பொழுது போகாமல் அதிமுக- பாஜக இடையே சீண்டு மூட்டி பல்பு வாங்கிய திமுக எம்பி செந்தில்குமார்.!

0
Follow on Google News

தர்மபுரி திமுக எம்பி செந்தில் குமார் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டு ஒரு வருடங்களுக்கு மேல் ஆன நிலையில், அவர் தொகுதி வளர்ச்சிக்காக ஆக்கப்பூர்வமாக ஏதும் செய்த மாதிரி எந்த தகவலும் இல்லை, சமூக வலைத்தளத்தில் முழு நேர ஊழியர் போன்று செயல்பட்டு வரும் செந்தில்குமார் எம்பி, அவ்வப்போது பொழுது போகாமல் யாரையாவது வம்பிழுத்து சண்டை போடுவது வழக்கம், கொரோன ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நேரத்தில்,தனது தொகுதி மக்கள் பற்றி சிறிதும் கண்டுகொள்ளாமல் பாமக தொண்டர்களிடம் சண்டையிட்டு பொழுதை கழித்தார்.

அதன் பின் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீமான் தம்பிகளிடம், ரஜினிகாந்த் ரசிகர்களிடம் இப்படி ஒவ்வொருவராக வம்பிழுத்து பொழுதை கழித்து வரும் செந்தில் குமார் அவ்வப்போது தனது சமூக வலைதள பதிவின் மூலம் சர்ச்சையில் சிக்குவது வழக்கம் அந்த வகையில் சமீபத்தில் நடிகர் பார்த்திபன் படைப்பில் வெளியான ஒத்த செருப்பு திரைப்படத்திற்கு மத்திய அரசு விருது அறிவித்ததை கேலி செய்து பார்த்திபன் படைப்பை கொச்சை படுத்தும் விதத்தில் கருத்து தெரிவித்திருந்தார் செந்தில்குமார் எம்பி.

இதற்கு பார்த்திபன் விளக்கம் கொடுத்த அறிக்கையில் இருந்த ஒவ்வொரு வரியும் திமுக எம்பி செந்திகுமார்க்கு தக்க பதிலடியாக இருந்தது, இதன் பின் திமுக எம்பி செந்தில்குமார் சமூக வலைதளத்தில் சற்று அடக்கி வாசித்து வந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் “பழைய குருடி! கதவைத் திறடி!”. என்ற பழமொழிக்கு ஏற்ப சமூக வளைத்தளத்தில் தனது இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் சமூக வலைத்தளத்தில் அடுத்தவரை வம்பிழுத்து பொழுதை கழிக்க தொடங்கியுள்ளார் செந்தில்குமார் எம்பி.

சில மாதங்களுக்கு முன் நடந்த தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பாஜக பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம.ஸ்ரீநிவாசன் பேசுகையில், பாஜகவுக்கு என்ற தனித்துவம் இருக்கு, ஒரு மாநிலத்தில் உள்ள ஒரு பெரிய கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைக்கும், அப்படி கூட்டணி அமைத்த பின் சிறிது நாளில் அந்த கூட்டணியின் டயனாமிக்ஸ் மாறும், பின் பாஜக பெரிய கட்சியாக மாறும், இது வேற எந்த கட்சிக்கு நடக்காத ஒரு நிகழ்வு என தெரிவித்த பேராசிரியர்.

இது தமிழ்நாட்டிலும் நடக்கின்றது, நடக்கபோகின்றது என பேசியிருந்தார் பேராசிரியர் இராம.ஸ்ரீநிவாசன். இந்த வீடியோ பதிவை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்த திமுக எம்பி செந்தில்குமார், அதிமுகவில் ஒரே ஒரு ரோஷம் உள்ள உறுப்பினர் இருந்திருந்தா பாஜக இப்படி எல்லாம் பேசி உங்கள் கட்சியை கேவலப்படுத்த வாய்ப்பு கொடுத்திருக்க மாட்டீர்கள் என பதிவு செய்து அதிமுக- பாஜக இடையே சீண்டு மூட்டி விடும் செயலில் இறங்கியுள்ளார்.

திமுக எம்பி செந்திகுமார் இந்த பதிவுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், வைகோ, திருமாவளவன் போன்றோர் கடந்த காலங்களில் திமுக மற்றும் அதன் கட்சி தலைவர் முக ஸ்டாலினை பற்றி மிக கீழ்த்தரமாக பேசிய வீடியோக்களை பதிவு செய்து திமுகவில் ஒரே ஒரு ரோஷம் உள்ள உறுப்பினர் இருந்திருந்தால் இவர்கள் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருப்பார்களா என வலைதளவாசிகள் கேள்வி எழுப்பி வருவது, திமுக எம்பி செந்தில் குமார் பல்பு வாங்குவது போன்று அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.