துட்டுக்கும் ரொட்டிக்கும் மதம்மாறிய உமக்கு..! எஸ்ரா சர்குணத்தை வெளுத்து வாங்கிய காயத்ரி ரகுராம்.!

0
Follow on Google News

சமீபத்தில் திமுக சார்பில் நடைபெற்ற வேளாண் சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாதிரியார் எஸ்ரா சர்குணம், மிக கீழ்தரமாக பிரதமர் மோடி குறித்து பேசினார், திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் பிரதமரை கீழ்த்தரமாக விமர்சனம் செய்த எஸ்ரா.சர்குணம் பேசிய பேச்சு பெரும் சர்ச்சை வெடித்துள்ளது, இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவி நடிகை காயத்ரி ரகுராம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்,அதில், கடவுள் இல்லை என்கின்ற நாத்திக கூட்டத்தின் கையேந்தி பிழைக்கும் பாவி எஸ்ரா சற்குணம் அனுதினமும் நாத்திக மேடைகளில் உலா வருகின்றார். இந்த ஆளிடம் பாவமன்னிப்பு வாக்கும் பக்தர்களை நினைத்தால் தான் வருத்தமாயிருக்கின்றது ..மேடைகளில் ஏறி வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி வயிறுவளர்க்கும் வக்கற்றவர் தான் இந்த பித்துக்குளி எஸ்ரா சற்குணம்.

நாகரீகத்தை கடைபிடிக்காத ஒழுக்கமில்லாத திமுக/திக போன்ற கயவர்களை மேடையில் இருத்திக்கொண்டு உளறும் அற்ப்ப பேச்சுகளை அறமறிந்த எவரும் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். உங்களுக்கெல்லாம் இந்த பாரத மண்ணில் பாவமன்னிப்பு கிடைக்க வாய்ப்பேயில்லை.துட்டுக்கும் ரொட்டிக்கும் மதம்மாறி காசில் உல்லாச வாழ்க்கை வாழும் உமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. நீர் செய்யும் காரியங்கள் உன் சமூகத்தை உனக்கெதிராய் திருப்பும் நாள் விரைவில் வரும்.

மேலும், பாஜகவை மதவாத கட்சி என்று கூறிய நீங்கள். விவசாயிகளின் பெயரை சொல்லி ஒரு மதம் சார்ந்த நபரை அழைத்து பாரத பிரதமருக்கு எதிராக ஜெபம் செய்கின்றீர்கள். இதை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். இதிலிருந்து அனைவரும் நீங்கள் இந்துக்களுக்கு எதிராக செயல்படுகின்றீர் என்று புரிந்து கொண்டனர் .ஆனால் நீங்கள் ஒருபொழுதும் விவசாயிகளுக்காக போராடியதே இல்லை.இத்துடன் உங்கள் நாடகத்தை முடித்துக் கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.