கடந்த திமுக ஆட்சியில் நகராட்சி மற்றும் ஊரக துறை அமைச்சராக இருந்த கே என் நேரு சார்ந்த துறையில் நடந்த மெகா ஊழல் தொடர்பாக தற்பொழுது ஆளும் தவெக ஆட்சியில் லஞ்ச ஒழிப்பு துறையில் வழக்கு பதிவு செய்துள்ளது. குறிப்பாக கடந்த திமுக ஆட்சி காலத்தில் முன்னாள் அமைச்சர் கே என் நேருவுக்கு சொந்தமான இடங்களில் நடந்த அமலாக்கத்துறை சோதனையில் சிக்கிய முக்கிய ஆவணங்களில்,
நகராட்சி மற்றும் ஊரக துறையில் பணியிடம் செய்வதற்காக சுமார் 150 பேரிடம் 25 லட்சம் முதல் 30 லட்சம் வரை லஞ்சம் வாங்கியதற்கான ஆதாரத்தை அமலாக்கத்துறை கண்டுபிடித்தது. குறிப்பாக முன்னாள் அமைச்சர் கே என் நேரு துறை சார்ந்த நிர்வாகத்தில் பணியில் சேர்வதற்காக சுமார் 2 லட்சம் நபர்கள் தேர்வு எழுதிய நிலையில், அதில் சுமார் 2300 பேர் நியமனம் செய்தனர்.

அப்படி சுமார் 2300க்கு மேற்பட்டவர்கள் பணி நியமனம் செய்ததில் சுமார் 150 பேர்களிடம் 25 லட்சம் முதல் 30 லட்சம் வரை முன்னாள் அமைச்சர் கே என் நேரு தரப்பினர் லஞ்சம் வாங்கிக் கொண்டு பணியில் நிமிர்த்தியதும், அந்த பணம் ஹவாலா பண மூலம் வெளிநாடுகளுக்கு சென்றதும் அமலாக்கத்துறை சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
இதில் 2300 பேர் நியமனம் செய்யப்பட்டத்தில் 150 பேரிடம் மட்டுமே லஞ்சம் வாங்கியதாக ஆதாரங்கள் சிக்கிய நிலையில், பணியில் நியமனம் செய்யப்பட்ட 2300 பேரிடமும் லஞ்சம் வாங்கப்பட்டு பனி நியமனம் செய்யப்பட்டதாக என அடுத்தடுத்து அமலாக்கத்துறை விசாரணை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இதற்கு முன்பு தற்பொழுது எப்படி முன்னாள் அமைச்சர் கே நேரு வேலை வாங்கித் தருவதாக லஞ்சம் பெற்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டதோ, அதேபோன்றுதான் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி கொடுப்பதாக லஞ்சம் பெற்றதாக அப்போது லஞ்ச ஒழிப்புத்துறையினால் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்ட வழக்கிற்காக தான் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கைது செய்து சுமார் ஒன்றரை வருடங்கள் சிறையில் வைத்திருந்தது. தற்பொழுது அதேபோன்ற ஒரு சூழல் தான் முன்னாள் அமைச்சர் கே நேருவுக்கும் ஏற்பட்டிருக்கிறது, விரைவில் செந்தில் பாலாஜியை கைது செய்து அமலாக்கத்துறை சிறையில் அடைத்தது போன்று முன்னாள் அமைச்சர் கே என் நேருவை கைது செய்வதற்கான அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
அதே நேரத்தில் முன்னாள் அமைச்சர் கே என் நேரு துறை சார்ந்த நிர்வாகத்தில் திமுகவிற்கு பார்ட்டி பன்ட் என்கின்ற பெயரில் உதயநிதி மற்றும் ஸ்டாலின் ஆகியோர் தொடர்புடைய வங்கி கண்களுக்கு பணம் சென்றுள்ளதாக அதை அமலாக்கத்துறை கண்டுபிடித்து விட்டதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் பார்ட்டி பண்ட என்கிற பெயரில் உதயநிதி மற்றும் ஸ்டாலின் தொடர்புடைய வங்கி கணக்குகளுக்கு பணம் சென்றதற்கான ஆதாரத்தை அமலாக்க துறை உறுதி செய்தால், அதற்கான ஆதாரம் அடிப்படையில் மேலும் ஒரு எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டால் மு க ஸ்டாலின் மொத்த குடும்பமும் கொத்தாக சிக்கும் என்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

