மக்களை கவர்ந்த அதிமுக திமுக தேர்தல் வாக்குறுதி வரிசையில் தற்போது மக்கள் நீதி மய்யம்…!

0
Follow on Google News

சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் அதிமுக, திமுக கட்சி ஏற்கனவே தாங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பட்டையைக் கிளப்பி வருகின்றனர். நேற்று முன்தினம் மார்ச் 19 மக்கள் நீதி மய்யம் சார்பாக “மக்கள் கேண்டீன்” அறிவிப்பு வெளியாகி உள்ளது. அனைவரிடமும் நல்ல வரவேற்ப்பையும் பெற்றுள்ளது.

தமிழகத்தில் தேர்தல் என்றாலே ஒவ்வொரு கட்சியின் வாக்குறுதிகள் அதிக முக்கியத்துவ வாய்ந்ததாக இருக்கும். தமிழகத்தில் மட்டும் வெளியாகும் வாக்குறுதிகள் தேர்தல் வாக்குறுதிகள் பல திட்டங்கள், அதிரடி அறிவிப்புகள், இலவச திட்டங்கள் என்று தமிழக கட்சிகளின் வாக்குறுதிகள் இந்தியா முழுவதும் கவனம் ஈர்க்கும்.

அப்படி தான் ஒரு சில தினம் முன் மக்கள் நீதி மய்யம் கமல் சிறப்பான தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டார். ஒரு சில தினம் முன் கோவையில் தனியார் ஹோட்டல் ஒன்றில் மக்கள் நீதி மய்யம் கமல் தாங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் நகராட்சிக்கும் மெட்ரோ சேவை, நீட் தேர்வுக்கு பதிலாக சீட் தேர்வு, தற்சார்பு கிராமங்கள் என்று பல முக்கிய அறிவிப்புகள் மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கையில் இருந்தது.

இதில் கமல் சொன்ன மிக மிக சிறப்பான விஷயம் ஒன்று வெளியாகி அனைவரையும் கவனத்தில் ஈர்த்துள்ளது. கமல் அறிவித்தது அது என்ன என்றால் மக்களுக்கான மக்கள் கேன்டீன். மிக குறைந்த விலையில் மக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் குறைந்த விலையில் அரசே வழங்கும். கமலின் இந்த தேர்தல் அறிக்கையின் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார்.