இதை பற்றி விரமணி பேச தயாரா.? இந்துக்கள் விஷயத்தில் மூக்கை நுழைத்த கி.வீரமணிக்கு காயத்ரி ரகுராம் சவால்.!

0
Follow on Google News

திராவிட கழக தலைவர் கி.வீரமணி அறிக்கை ஓன்று வெளியிட்டிருந்தார் அதில், அண்மையில் தமிழ்நாடு இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையின்கீழ் உள்ள கோவில்களின் சார்பில், நான்கு அறிவியல் கலைக் கல்லூரிகளைத் தொடங்குவதென முடிவெடுத்து, சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீசுவரர் கோவில் நிர்வாகத்தின்கீழ் நடத்தப்பட அறிவித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.

அதனையொட்டி சென்னை கொளத்தூரில் ஏற்பாடு செய்து, இவ்வாண்டே தொடங்க, தற்காலிகமாக அரசு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக் கட்டடத்தில் (தகுந்த தனிக் கட்டடங்கள் தேர்வு செய்யப்பட்ட உரிய இடத்தில் கட்டி முடிக்கப் படும்வரை) இயங்க ஏற்பாடு செய்திருப்பதும் சரியான ஏற்பாடாகும்.இவ்வளவு வேகமான முறையிலான செயல் பாடுகளுக்குக் காரணமான அத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்களுக்கு நமது பாராட் டுகள்!

ஆனால், அதேநேரத்தில் இன்று (16.10.2021) சில ஏடுகளில் வெளிவந்துள்ள ஒரு விளம்பரம் நம்மையும், மற்ற பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. ‘‘வேலை வாய்ப்பு – விளம்பர அறிவிப்பு” என்ற தலைப்பில், உதவி விரிவுரையாளர்களுக் கான விண்ணப்பம் கோரும் விளம்பரம் அது. அரசமைப்புச் சட்ட நடைமுறைக்கு முற்றிலும் விரோதமான – தவறான செய்கை அதில் இந்துக்கள் மட்டும்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறி, ‘Only Hindus’ என்று போட்டிருப்பது மிகவும் அதிர்ச்சிக்கு உரியது – அரசமைப்புச் சட்ட நடைமுறைக்கும் முற்றிலும் விரோதமான – தவறான செய்கை.

இது ஹிந்துக் கோவில் பணிக்கான வேலை அல்ல – ஹிந்துக்கள் மட்டும் என்று கூறுவதா? இது அனைவருக்கும் கல்வி சொல்லிக் கொடுக்கும் கல்லூரிப் பணி – அரசுப் பணி. அனைத்து மத மாணவர்களும், மத மற்றவர் களும்கூட அக்கல்லூரியில் சேர்ந்து படிக்கும் உரிமை பெற்ற வர்கள்தானே! அனைத்து மாணவர்களும் சேர உரிமை உண்டு எப்படி கிறித்தவ நிர்வாகம் நடத்தும் கல்லூரிகளில் கிறித்தவர் கள் மட்டும் என்று இருப்பதில் லையோ, முஸ்லீம்கள் நடத்தும் கல்லூரிகளில் முஸ்லீம்கள் மட்டும் என்று இருப்பதில்லையோ – அது போல அனைத்து மாணவர்களும் சேர உரிமை உண்டு.

எனவே, இதனை தமிழ்நாடு முதலமைச்சரின் முக்கிய கவனத்துக்குக் கொண்டு வருகிறோம். காரணம், இது அவரது தொகுதியில் தொடங் கப்படும் சிறந்த முயற்சி – அதில் இதுபோன்ற சட்ட விரோத குறைபாடுகள் தொடக்கத்திலேயே களையப்படவேண்டும். இதற்குக் காரணமான துறையினருக்கும் போதிய விளக்கத்தை அளித்து, மீண்டும் இத் தவறு மற்ற கல்லூரி விளம்பரங்களிலும் வராமல் இருக்கவேண்டும் என்பதைக் கனிவுடன் தெரி வித்துக் கொள்கிறோம் என கி.வீரமணி தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

இதற்கு பாஜகவை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம், இந்த நபரை எங்கிருந்து கண்டுபிடித்தீர்கள்?அரசு உதவி பெறும் கிருஸ்தவ டையசிசன் பள்ளிகளில் எந்த இந்துக்களுக்கும் வேலை தருவது இல்லை அங்கு இட ஒதுக்கீடு கூட சரியாக அமல்படுத்த படுவது இல்லை இதை பற்றி விரமணி பேச தயாரா ஏன் உங்கள் திக அறக்கட்டளையில் கூட உங்கள் மகனை தான் தலைவராகவும் நிதிகளை கையாளும் பொறுப்பில் வைத்து உள்ளீர்கள்.இதில் வேறு யாருக்காவது பதவிகளை விட்டு தருவீர்களா. எத்தனை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடம் அளித்தது இருக்கிறிர்கள் ஊருக்கு உபதேசம் செய்யாதீர்கள் வீரமணி என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.