தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் கேப்டன் வருண் சிங்கின் உடல்நிலை!

0
Follow on Google News

நீலகிரி விபத்தில் உயிருடன் மீட்கப்பட்ட கேப்டன் வருண் சிங் இப்போது பெங்களூர் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நீலகிரி அருகே உள்ள குன்னூர் பகுதியில் சென்ற இராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் முப்படைத் தளபதி விபின் ராவத் உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் 80 சதவீத தீக்காயங்களோடு கேப்டன் வருண் சிங் மட்டுமே உயிரோடு மீட்கப்பட்டார். முதலில் கோயம்புத்தூர் வெல்லிங்டன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற அவர் இப்பொது பெங்களூர் இராணுவ மருத்துவமனையில் தீவிர கண்காணிப்புப் பிரிவில் சிகிச்சையில் உள்ளார்.

நான்கு நாட்கள் சிகிச்சைக்குப் பிறகும் அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையிலேயே உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கேப்டன் வருண் சிங் சிகிச்சையில் தேறி வரவேண்டும் என நாடு முழுவதும் உள்ள மக்கள் பிராத்தித்து வருகின்றனர்.