மூன்று பெண்களை கற்பழித்தால் தான் பாஜகவில் சீட்டா.? திருச்சி மருத்துவர் ஜெபக்குமார் மீது வழக்கு பதிவு.!

0
Follow on Google News

திருச்சி புத்தூர் பகுதியில் உள்ள கிங்ஸ்லீ மருத்துவமனையில் மருத்துவராக இருந்து வருகின்றவர் டாக்டர் ஜெபக்குமார், சிகிச்சைக்காக கிங்ஸ்லீ மருத்துவமனை சென்ற திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் காவி துண்டு அணிதிருந்ததை பார்த்த மருத்துவர் ஜெபக்குமார், பாஜக வில் மூன்று பெண்களுக்கு மேல் கற்பழித்து இருந்தால் தான் சீட்டு கொடுப்பானுங்க என்ற பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை தரக்குறைவாக பேசியுள்ளார்.

ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட மதத்தையும், பாஜகவையும் தவறாக பேசி வருவதாக புகார் எழுந்தது, மது பிரியரான மருத்துவர் ஜெபக்குமார் மது போதையில் மருத்துவமனை வருவதாக கூறப்படுகிறது, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் மத பிரச்சாரம் செய்து வரும் மருத்துவர் ஜெபக்குமார், சிகிச்சை பெற வருபவர்களிடம் அவர்களின் மதநம்பிக்கைகளையும், அவர்களின் உணர்வுகளையும் புண்படுத்தும். விதமாக இழிவு செய்து வெளிப்படையாக பேசி வருவதாக வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் திருச்சியில் கிங்ஸ்லி மருத்துவமனையை சேரந்த மருத்துவர் ஜெபக்குமார் பிரதமர் மோடி அமித்ஷா அவர்களையும் தரக்குறைவாக பேசிய அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி மாவட்ட பாஜக சார்பில் உறையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க உறுதியளித்துடன் ஏற்கனவே அவர் மீது வழக்கு பதிந்த விவரத்தையும் அதற்க்கான FIR நகலையும் போலீசார் பாஜகவினரிடம் கொடுத்துள்ளனர்.