பழனியில் கேரள பெண் கடத்தி பாலியல் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை.. அதிர்ச்சி தகவலை வெளியிட்ட மருத்துவர் ராமதாஸ்..

0
Follow on Google News

பழனி முருகன் கோவிலுக்கு வந்த கேரள பெண்ணை கடத்திய ஒரு கும்பல் விடுதியில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழனி முருகன் கோவிலுக்கு கணவனுடன் வந்த பெண்ணை தங்கும் விடுதியில் அழைத்துச் சென்று சிலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக பழனி காவல்துறையினர் புகார் வாங்க மறுத்ததாகவும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபுவிற்கு கேரள டிஜிபி அனில்குமார் கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்த புகாரைக் கூட காவல்துறை வாங்க மறுத்திருப்பதும் தமிழகம் தலைகுனிய வேண்டிய செயல்கள் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, பழனி முருகன் கோயிலுக்கு கடந்த மாதம் 19-ஆம் தேதி வழிபாட்டுக்காக வந்த கேரளத்தை சேர்ந்த 40 வயது பெண் அங்குள்ள கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன! அதைவிடக் கொடுமை தமக்கு இழைக்கப்பட்ட கூட்டு பாலியல் வன்கொடுமை குறித்து பழனி காவல்நிலையத்தில் அப்பெண் புகார் கொடுத்தும் அதை வாங்க காவல்துறையினர் மறுத்து விட்டனர் என்பது தான்.

இதுபற்றி தமிழக டிஜிபிக்கு கேரள டிஜிபி கடிதம் எழுதியுள்ளார்! தமிழ்நாட்டின் புனிதத் தலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதும், பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்த புகாரைக் கூட காவல்துறை வாங்க மறுத்திருப்பதும் தமிழகம் தலைகுனிய வேண்டிய செயல்கள். இதற்கு காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.